இளம்பிள்ளை, டிசம்பர்.25- இடங்கணசாலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கிராம மக்களின் பட்டா மற்றும் சிட்டாவில் உள்ள பிழைகளை கணினி மூலம் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இடங்கணசாலை நகராட்சி திருமண மண் டபத்தில் வெள்ளியன்று நடைபெற்றது சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் இடங் கணசாலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பிட் 1, பிட் 2 ஆகிய கிராம மக்களின் பட்டா மற் றும் சிட்டாவில் உள்ள பிழைகளை கணினி மூலம் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இடங்கணசாலை நகராட்சி திருமண மண்ட பத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. முகா மிற்கு சங்ககிரி வட்டாட்சியர் எஸ். பானுமதி தலைமை வகித்தார். இந்த முகாமில் புல எண் உட்பிரிவு எண்களில் தவறான பதிவு, பரப்பளவு பதிவில் பிழை திருத்தம், பட்டா தாரர் மற்றும் உறவுமுறை பெயர் திருத்தம், கணினியில் விடுபட்டுள்ள புல எண் சேர்த் தல் தொடர்பாக மற்றும் முதியோர் உதவித் தொகை தொடர்பாக மொத்தம் 80 மனுக் களை பொதுமக்கள் வழங்கினர். அதில், 58 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப் பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து அவர்களது பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலர்கள் முனியப்பன், கோபால உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.