திருப்பூர், ஜூன் 1- அவிநாசி ஒன்றியத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்தில் நடுவச்சேரி காட்டுவளவு, ஆட் டையம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை குழந்தைகளுக்கு கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், சிறார் இலக்கிய எழுத்தாளருமான உதயசங்கர் பங்கேற்று குழந்தைகளுக்கு கதைகள் சொல்லியதுடன், ஆடல், பாடல், விளையாட்டுகளிலும் அவர்களுடன் உற்சாகமாக கலந்து ரையாடினர். இந்நிகழ்வில் திரளான குழந்தைகள் ஆர் வத்துடன் பங்கேற்றனர். அவிநாசி தமுஎகச நிர்வாகிகள் தினகரன், சம்பத் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.