தாராபுரம், டிச.5- தாராபுரத்தில் கிராமப்புற பேருந்து கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட் டுள்ளதால் அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் பாதிப் படைந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என். கனகராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட் டுள்ளதாவது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தாராபுரத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்சமயம் கிராமப் புறங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. மேலும், தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக் கப்பட்டு வந்த நம்பர் 21 குமாரசாமி கோட்டை, நம்பர் 2ஏ சின்னதாராபுரம், நம்பர் 8 ஏ மானூர்பாளையம், நம்பர் 10 அங்கித்தொழுவு, நம்பர் 12 ஏ கொடு வாய், நம்பர் 16 பூளவாடி, நம்பர் 18 அர வக்குறிச்சி, நம்பர் 7 ஜல்லிபட்டி, நம்பர் 10 வீராட்சிமங்கலம், நம்பர் 11 சத்திரம் செல்லும் பேருந்துகள் நிறுத் தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி களில் இருந்து பள்ளி, கல்லூரி செல் லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராமப்பகுதிகளில் இருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கடும் சிரமமடைந் துள்ளனர். ஆகவே உடனடியாக மீண் டும் பேருந்துகளை இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.