கோவை, மே 7- இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி போராடிய மாண வர்களை தாக்கிய அமெரிக்க காவல் துறையை கண்டித்து, கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேல் நாட்டின் கொடூர நடவ டிக்கையால் அப்பாவி பாலஸ்தீன குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து உலகம் முழுவ தும் எதிர்ப்பியக்கங்கள் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகுதி யாக இஸ்ரேல் ராணுவத்தை கண்டித் தும், சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆத ரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப் பாவில் உள்ள மாணவர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கொலம் பியா பல்கலைக்கழகம், ஹார்ட் வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் கள் போராட்டம் தீவிரமடைந்து வரு கிறது. இஸ்ரேலின் ராணுவ நடவ டிக்கைக்கு ஆதரவாக உள்ள அமெ ரிக்கா, பாலஸ்தீன மக்களுக்காக போராடக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க காவல்துறை கொடூர மாக தாக்குதலை தொடுத்துள்ளது. அமெரிக்காவின் மாணவர் விரோத நடவடிக்கையை கண்டித் தும், போராட்டத்தில் ஈடுபடும் மாண வர்களுக்கு ஆதரவாகவும், உடனடி யாக இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும் மாநிலம் முழு வதும் இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பிரவீன், சாலினி, மாநிலக்குழு உறுப்பினர் கல்கி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், டார் வின், கோகுல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.