districts

img

உழைப்பாளர்களிடம் சுரண்டுவதை நிறுத்தி, கார்ப்ரேட்டுகளுக்கு வரி விதித்திடுக

திருப்பூர், பிப்.27- உழைக்கும் மக்களிடம் வரி என்கிற பெய ரில் சுரண்டுவதை நிறுத்து, பெரும் செல்வந் தர்களுக்கு வரி விதிப்பதுடன், கார்ப்பரேட் வரியை அதிகரிக்கவும், அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வலியுறுத்தி, சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இனைந்து ஊத்துக்குளி ஆர்.எஸ். முதல் குன்னத்தூர் வரை பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர். இந்திய நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதா ரக் கோரிக்கைகளை முன்வைத்தும், நாட்டு மக்களுக்கு எதிரான மோடி தலைமையிலான  ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை  எதிர்த்தும் ஏப்ரல் 5ஆம் தேதி தில்லியில் லட்சக் கணக்கானோர் பங்கேற்க உள்ள மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று அமைப்பு கள் இணைந்து இந்த இயக்கத்தை நடத்து கின்றனர்.  இந்த பேரணியின் நோக்கத்தை விளக்கி யும், மோடி அரசின் தொழிலாளர் மற்றும் விவ சாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கை களை அம்பலப்படுத்தியும் மேற்கண்ட மூன்று  அமைப்புகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடத் தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக ஊத்துக்குளி தாலுகாவில் ஞாயிறன்று நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக் குளி ஆர்.எஸ். பகுதியில் தொடங்கிய இந்த நடை பயணத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி  தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி இந்த நடைபய ணத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில், அனைத்து தொழிலாளர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயி ரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.10 ஆயி ரம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், விவசா யத் தொழிலாளர் பெற்ற கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும். 60 வயதான அனை வருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், மின்சார திருத்த மசோ தாவையும் திரும்பப்பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக்கூடாது. பொது விநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் 14 அத்தியாவசி யப் பொருட்களை வழங்க வேண்டும். வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச் சாரம் செய்யப்பட்டது. இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.குமார், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு. சரஸ்வதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன், சிஐடியு நிர்வாகிகள் கே.பெரியசாமி, வி.கே.பழனி சாமி, ஆர்.பழனிச்சாமி, விவசாயத் தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் கே.பிரகாஷ், எம். பழனிச்சாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.மணி, ம.சத்தியமூர்த்தி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் தொடங்கிய நடைபயணம் பூசாரிபாளையம், ஆதியூர், கருங்கல்மேடு, காந்திநகர் வழியாக குன்னத் தூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. ஒன் றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக் கையை கண்டித்து நடைபெற்ற இந்த நடைபய ணம் வெகுமக்களின் கவனத்தை ஈர்த்தது.