districts

img

கோவையில் வஉசிக்கு சிலை - அமைச்சர் ஆய்வு

கோவை, நவ.19 கோவை வ.உ.சி பூங்காவில் 16 அடி  உயரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைக்கப்படும் இடத்தை வெள்ளியன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.  கோவை வ.உ.சி பூங்காவில், வ.உ.சிதம்பரனார் சிலை அமைய உள்ள இடத்தினை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வை யிட்டார். கோவை மாநகராட்சி ஆணை யர் பிரதாப், மேயர் கல்பனா மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனி ருந்தனர்.  பின்னர் அமைச்சர் மு.பெ.சாமி நாதன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது, தமிழக முதலமைச்சர் கோவை யில் வ.உ.சி சிலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து அதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றது. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.40 லட்சம் மதிப்பில் சிலை அமைக் கப்படுகிறது.  மேலும், கோவை மாநகராட்சியில் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. கோவைக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. குறிப்பாக நெல்லை, தூத்துகுடி மாவட்டங்களில்  அரசு கட்டி டங்களுக்கு வ.உ.சி பெயர் வைக் கப்பட இருக்கின்றது. வஉசி வாழ்ந்த  வீட்டில் ஒளி, ஒலி காட்சி அமைக்கப் பட்டுள்ளது என்றார்.  மேலும், சிலைகளை பூங்களுக்கு மாற்ற வேண்டுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கின்றது. இனிமேல் வைக்கப்படும் சிலைகளை மட்டும் பூங்காவில் வைக்க நீதிமன்றத்தில் முறையிட இருக்கின்றோம். மேலும் 3 மாத காலத்தில்  கோவையில் வ.உ.சி  சிலை அமைக்கப்படும் என்றார்.