உடுமலை, ஜூன் 22- உடுமலையில் மாநிலம் தழுவிய களரி சாம்பியன்ஷிப் போட்டிகள் சனியன்று நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் களரி பயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் மாநிலம் தழுவிய சாம்பியன்ஷிப் போட்டிகள் கணியூர் சோழமாதேவி மேட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. திரு வனந்தபுரம் இந்தியன் களரி பயட்டு பெடரே ஷன் செயலாளர் வக்கீல் கே.பி.பூந்துறை சோமன் தலைமை வகித்தார். களரிபயட்டு அசோசியேசன் ஆப் தமிழ்நாடு செயலாளர் சு. வீரமணி ஆசான் வரவேற்றார். சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். மடத் துக்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. விஜயகுமார் மற்றும் உடுமலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், இந்திய சைலாத் சிலம்பச் சங்கம் பொதுச்செ யலாளர் குமரி கணேசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கினார். மாநிலம் தழுவிய களரிப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட களரி பயட்டு போட்டியாளர்கள் கலந்து கொண் டனர்.