திருப்பூர், மே 3 - கல்குவாரிகளுக்கு உடந்தை யாக செயல்பட்ட பல்லடம் வட்டாட் சியர் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் புதனன்று விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் பல்லடம் முன்னாள் வட்டாட்சியர் நந்தகோபால் மீது விவ சாயி விஜயகுமார் பல்வேறு குற்றச் சாட்டுகளை கூறி, அவர் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுப்பதோடு, இந்திய தண்டனைச் சட்டப்படி குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டிருக்கிறார். பல்லடம் வட்டத்தில் உள்ள கோடங் கிபாளையம் கல்குவாரிகள், பூமலூர் கல்குவாரிகள், 63 வேலம்பாளையம் கல்குவாரிகள் என பல்வேறு கல்குவா ரிகள் சட்டவிரோதமாக இயங்கி வரு வதை பற்றி, ஆதாரப்பூர்வமாக பல் வேறு புகார் கொடுத்தும் பல்லடம் முன் னாள் வட்டாட்சியர் நந்தகோபால் எவ் வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் உண்மையான ஆவணங் களை மறைத்து, திசை திருப்பி, சட்ட விரோதமான முறையில் கல் குவாரி இயங்க துணை நின்று, தொடர்ந்து சட்ட விரோத கல் குவாரிகளுக்கு ஆதர வாக இருந்தார்.
இவர் பல்வேறு போலி ஆவணங் களை உருவாக்கியும், அரசாணை, அரசு விதிகள் எதுவும் இல்லாம லேயே போலியாக பல் வேறு தகவல்கள் கொடுத்தும், உண்மை களை மறைத்து பொய்யான அறிக்கை களை தந்து மிகப்பெரிய மோசடியில் ஈடு பட்டார் என கோடங்கிபாளையம் இச்சிப் பட்டி விவசாயி விஜயகுமார் புகார் கூறியிருந்தார். இந்த புகார் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, புத னன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர் விசாரணை மேற்கொண் டார். இந்த விசாரணையில், விவசாயி விஜயகுமார் பங்கேற்று, பல்லடம் முன் னாள் வட்டாட்சியரின் மீது பல்வேறு ஆதாரங்களுடன் வாக்கு மூலம் தந்தார். இதில் கடந்த 2022 மார்ச் முதல் 2023 மார்ச் 7ஆம் தேதி வரை பல்லடம் வட்டாட்சிய ராக பணியாற்றிய நந்தகோபால் விவசா யிகள் கொடுத்த புகார்களை கண்டு கொள்ளவில்லை,
கல்குவாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். குறிப்பாக, பொது மக்கள் கொடுக் கும் புகார் மனுவின் பேரிலும் வட்டக் கண்காணிப்பு குழு கன்வீனர் என்ற அடிப்படையில் வட்டாட்சியர் 15 நாட்க ளில் வட்ட கண்காணிப்பு குழுவைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் வட்டாட்சியர் நேரில் கள ஆய்வு, புலத்தணிக்கை செய்யாமல் போலியான அறிக்கையை வழங்கி, கல் குவாரிகளின் சட்டவிரோத செயல்க ளுக்கு உடந்தையாக இருந்திருக்கி றார். இப்பகுதி கல்குவாரிகள் மீது ஆதா ரப்பூர்வமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு திட்டமிட்டு, அரசு விதிகளை மீறிச் செயல்பட்ட ராமகிருஷ்ணா கல்கு வாரியின் குற்றங்களை மூடி மறைக்க அவர் துணை நின்றார். இவர் பணியாற்றிய ஓராண்டு காலத் தில் குவாரிகளுக்கு கொடுக்கப்பட்ட புலத்தணிக்கை அறிக்கை அனைத்தும் பொய்யான சட்ட விரோதமான புலத்த ணிக்கை அறிக்கைகள் ஆகும். வட்டாட் சியர் என்ற முறையில் கல்குவாரி உரி மையாளர்களுக்கு ஆதரவாக பல லட் சங்கள் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக இருந்துள்ளார். எனவே அவர் மீது துறைரீதியான நடவ டிக்கை எடுப்பதோடு, இந்திய தண் டனை சட்டப்படி குற்றவியல் நடவ டிக்கை எடுக்கவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.