கோவை, பிப்.11- முதல்வர் ஸ்டாலின் மூலவரா கவும், அமைச்சர் உதயநிதி உற்சவரா கவும் உள்ளதாக கோவையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., உரையாற்றினார். கோவை மாவட்டம், சரவணம் பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார் பில், புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இந்நி கழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், ஆ.ராசா, கு.சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஆ.ராசா எம்.பி., பேசுகையில், இந் நிகழ்ச்சி மலைப்பாகவும், வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும், அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் எல்லாம் கலைஞருடன் பயணித்தவர்கள். இன்றைய முதலமைச்சர் உடனும் பயணித்துக் கொண்டிருப்பவர்கள். கலைஞர் முதுமை காரணமாக முதலமைச்சராக இருந்தாலும், அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மகத்தான மனிதர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆற்றிய பணிகளை எல்லாம் கலைஞரிடம் கூறுவோம். அப்படி கூறும் போது கலைஞர் நீங்கள் மூலவர் உற்சவ ரராக மு.க.ஸ்டாலின் சென்று கொண் டிருக்கிறார் என கூறுவோம். தற்பொழுது, முதுமை காரண மாக அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை பெறுகின்ற காரணத்தினால் மூலவராக மு.க. ஸ்டாலின் அங்கே அமர்ந்திருக்கி றார். உற்சவராக விளையாட்டுத் துறை அமைச்சர் இங்கு வந்திருக்கி றார், என்றார். அப்போது, பெரம்ப லூருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பி லான குடிநீர் திட்டத்தையும் செய்து தர வேண்டும் என அமைச்சர் கே. என்.நேருவிடம் கோரிக்கை விடுத் தார்.