தருமபுரி, நவ.16- பென்னாகரம் அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கதிரடிக்கும் களத்தில், தண் ணீர் தேங்கி நிற்கும் அவல நிலையை போக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றி யம், மாதேஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பில்லப் பநாயக்கனஅள்ளி கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கதிர டிக்கும் களம் அமைக்கப்பட்டது. கிராமப்பு றங்களில் உள்ள விவசாயிகள் ராகி, சாமை, நெல் உள்ளிட்ட விவசாய விளைப் பொருட்களை பாதுகாப்பதற்காக அமைக் கப்பட்ட இந்த களம், நிர்ணயிக்கப்பட்ட தரத் தில் அமைக்கப்பட்டால், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கதிரடிக் கும் களத்தில் ஆங்கங்கே சிமெண்ட் தளத்தில் மேடுபள்ளங்கள், விரிசல்கள் உள்ளன. இத னால் களத்தில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் தேங்கியுள்ள தண் ணீரை அகற்ற முடியாமலும், தங்களது தானியங்கள் மற்றும் வைக்கோலை உலர்த்த முடியாமலும் விவசாயிகள் மிகவும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். அரசு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்தும், விவசாயிக ளுக்கான இந்த திட்டத்தில் முறையாக பணி களை செய்து முடிக்காத ஒப்பந்ததாரர் களை, கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். மேலும், தர மற்ற முறையில் அமைக்கப்பட்ட கதிரடிக் கும் களத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகா தார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே, அதி காரிகள் தலையிட்டு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.