districts

img

அரசுப்பள்ளியில் தேங்கிய மழைநீர்

நாமக்கல், நவ.16- குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங் கிய மழைநீரால், மாணவிகள், ஆசிரியர்கள் அவதிக் குள்ளாகினர்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மழைக் காலங்களில் இப்பள்ளியில் தண்ணீர் தேங்குவது வழக்க மாக உள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று குமார பாளையத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் காரணமாக அரசுப்பள்ளி யின் சிறிய கேட் மற்றும் பெரிய கேட் இரண்டு நுழை வாயில் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. மாலை  பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்ததாலும், அதி களவு தண்ணீர் தேங்கியதாலும், பள்ளியிலிருந்து வெளி யேற முடியாமல் மாணவிகள் தவிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து ஆசிரியைகள் மாணவிகளை பாதுகாப் பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர்.  இதுகுறித்து அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவி களின் பெற்றோர்கள் கூறுகையில், மழைக்காலங்க ளில் இதுபோன்று தண்ணீர் தேங்குவதால் மாணவி கள் பள்ளிக்கு வரும்போதும், திரும்ப வீட்டுக்கு செல் லும்போதும் மிகுந்த அவதிப்படுகின்றனர். சேறும், சகதி யுமான இந்த நுழைவாயில் வழியில் கால் வைத்து நடக்கவே மிகவும் சிரமமாக உள்ளது. சேற்றில் கால் வைத்து நடக்கும் போது, சேற்றுப்புண் போன்ற மழைக் கால நோய்கள் தொற்றும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாக மும், இப்பகுதியை சீர்படுத்தி கான்கிரீட் சாலை அமைத் துத்தர வேண்டும், என்றனர்.