உதகை, டிச. 19- பந்தலூர் பகுதியில் பெரும் அச் சுறுத்தலை ஏற்படுத்தி வரும் புல்லட் காட்டு யானையை அடர் வனப்பகுதி யில் விரட்ட பொம்மன் மற்றும் சீனிவா சன் என்கிற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சேரம்பாடி, சேரங் கோடு, கொளப்பள்ளி, படசேரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடு களை சேதப்படுத்தி தொடர் அச்சுறுத் தலை காட்டு யானை (புல்லட்) ஏற் படுத்தி வந்தது. இந்த காட்டு யானையை வனத்துறையினர் உடனடியாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட வேண்டும் என வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியி னர் பந்தலூர் பஜார் பகுதியில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களுக்கு தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், இந்த காட்டு யானையை விரைந்து விரட்டவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த காட்டு யானையை விரட்ட கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ள னர். இதுகுறித்து வனத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது, கூடலூர் வனக்கோட் டம், சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்ச ரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு ஆண் காட்டுயானை பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நடமாடி உடை மைகளை சேதப்படுத்தி வருகிறது. ஒற்றை காட்டுயானையை வனப்பணி யாளர்கள் படச்சேரி பகுதியிலிருந்து சிக் கனாவயல் வனப்பகுதிக்கு விரப்பட் டது. மேலும் டிரோன் உதவியுடன் பகல் நேரத்தில் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. முதுமலை மற்றும் சரக வனப்பணியாளர்களை கொண்டு யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இந்த ஒற்றை காட்டுயானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முதுமலை புலிகள் காப்பாகத்திலிருந்து பொம் மன் மற்றும் சீனிவாசன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள் ளன. வனத்துறை எந்நேரமும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய் வதற்காககவும், விவசாயப் பயிர்களை பாதுகாப்பதற்காகவும், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் திரும்ப அனுப்புவதற்கு இரவு பகலாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எனவே சேரம்பாடி, பிதர்காடு மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பொது மக்கள் வனத்துறைக்கு தங்களது ஒத் துழைப்பிணை முழுமையாக வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.