சேலம், நவ.6- ரஷ்யா பாதுகாப்புயின்மையாக உணர்ந் ததால் உக்ரைன் மீது போர் தொடுத்தனர். ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக இந்தியா நட்புறவில் உள்ளதால் ரஷ்யாவிற்கான ஆத ரவு நிலைப்பாட்டை இந்தியா மேற்கொண்ட தாக ஐநாசபையின் முன்னாள் இந்திய பிரதி நிதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவி களுக்கு ஐக்கிய நாடுகள் சபை குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐநா சபை யின் செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ளவும் மாதிரி ஐநா சபை கூட்டம் நடைபெற்றது. இப்பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்ற னர். முன்னதாக ஐநா சபை முன்ளாள் இந்திய பிரதிநிதி சீனிவாசன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் ஐக்கிய நாடுகள் சபை போன்று வறுமை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் தடுப்பு, பெண்கள் முன்னேற்றம், திடக் கழிவு மேலாண்மை, குடிநீர் பிரச்சனை உள் ளிட்ட உலக நாடுகள் சந்திக்கும் பிரச்சனை கள் குறித்து மாணவர்கள் படிக்கும் காலங் களில் உலகளாவிய அடிப்படை அறிவை வளர்க்க ஒவ்வொரு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறுகையில், ஐக்கிய நாடுகள் என்பது குறித்து வளரும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந் துள்ளது.வெற்றி, தோல்விகள் நிறைய உள்ளது. இதனால் ஐக்கியநாடு சபை களின் செயல்பாட்டை நிறுத்திவிட முடியாது. எல்லாம் நாடுகளுக்கு இடையே பரஸ்பரம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்ப டுத்தக்கூடிய கடமை ஐக்கிய நாடுகளுக்கு உள்ளது. ஐக்கியநாடுகளுக்கு மிகவும் சவாலான நேரங்கள் என்றால், கொரோனா பாதிப்பு மற் றும் உக்கரைன் போர் ஏற்பட்ட நேரங்களில் ஐக்கிய நாடுகள் சோதனைக்கு உள்ளான கட்டமாக இருந்தது.
இந்த மாதிரியான விவகாரங்களை வள ரும் இளைஞர்கள் இடையே பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் ஒருநாள் ஐக்கிய நாடுகளுக்கு சபைக்கு செல்லும்போது இது குறித்து அவர்களுக்கு தெரியவரும். ஐக்கிய நாடுகளில் தூதுவராக மாறியபோது 193 நாடுகளையும் பார்க்க வேண்டிய கட்டா யத்தில் இருந்தோம். ரஷ்யா நாடு உக்ரைன் மீது போர் தொடுத்தபோது ரஷ்யாவிற்கு பாதுகாப்பின் மையாக உணர்ந்ததால் உக்ரைன் மீது போர் தொடுக்கிறார்கள். மற்றநாடுகளுக்கு எவ் வாறு பிரச்சனை வரும் என்பதை பார்த்து அதை தவிர்த்திருக்கலாம். இந்த விவகா ரத்தில் இந்தியா ஏன் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது என்றால் ரஷ்யா உடன் பல ஆண்டுகளாக நட்புறவில் உள்ளது. இந்திய நாட்டிற்கு தேவையான ராணுவ தளவா டங்கள் 70 சதவிகிதம் ரஷ்யாவில் இருந்து வந்து கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது ரஷ்யாவை ஒதுக்கிவிட முடியாது. காஷ்மீர் மற்றும் கோவாவில் பிரச்சனை கள் எழுந்தபோது ரஷ்யா நமக்காக ஆதர வாக இருந்துள்ளது. இதை மறுக்கவோ, மறக்கவோ கூடாது. இதனால்தான் ரஷ்யா வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என் றார்.