தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையில் இன்ஜினியரிங் தொழிலும், திருப்பூர், ஈரோட்டில் பனியன் தொழிலும், பஞ்சாலைத் தொழிலும், பவர்லூம் தொழிலும் சிறந்து விளங்கிய அதே நேரத்தில் இணையாக நவீன வேளாண்மையும் இங்கே சிறந்து விளங்கியது. விவசாயமும், தொழிலும் முன்னேறியது. இந்தியாவில் பசுமைப் புரட்சி காலம் துவங்கிய போதே கரும்பு, நெல், மஞ்சள், வாழை, பருத்தி, கடலை, நிலக்கடலை என 72 வகையான பயிர்கள் சாகுபடி செய்யும் பகுதியாக இருந்து வந்தது. அதிகபட்ச மகசூல் கண்ட மேற்கு மண்டல விவசாயம், பசுமைப்புரட்சி காலத்தில் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக் கழகம் நிறுவப்பெற்று நீண்ட இழைப் பருத்தியான சுவினும் அதிக உற்பத்தி தரும் எம்.சி. 5, டிசிஎச் என விதவிதமான பருத்தி ரகங்களும், ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20, பொன்னி, பவானி, ஆடுதுறை என நெல் ரகங்களும், காய்கறிகளில், பயிர் வகைகளில், சிறுதானியங்களில் புதிய ரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்தது பல்கலைக்கழகம். வீரிய விதைகளை விவசாயத்தில் பயிர் செய்து உணவு தானிய உற்பத்தியை பெருக்கியதில் இந்தியாவிலே முன்னணியில் நின்ற விவசாயிகள் நம் விவசாயிகள்.
நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கியதால் விவசாய ஆராய்ச்சியை மெல்ல, மெல்ல கை விடுகின்றன அரசுகள். கோயம்புத்தூர் பல்கலைக் கழக ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பெரு நிறுவனங்களின் பெயரில் கட்டிடங்கள், அரங்கங்கள் மாறி வருகின்றன. பேராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பற்றாக்குறை, ஊழியர்கள் இல்லை, நல்ல பராமரிப்பு இல்லை என்றால், இனி எங்கே நவீன ரக விதை விவசாயிகளுக்கு கிடைக்கும்? “விதை பேராயுதம்” என்றார் நம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்! ஆனால் தனியார்மயம், நவீனமயம் விதைக்கே பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒரு கிலோ மக்காச்சோளம் ரூபாய் 18 க்குதான் வாங்குவார்கள். ஆனால் விதை மக்காசோளம் கிலோ ரூபாய் 250-க்கு ஜின்ஜிண்டா, மஹோகிகோ, சைபர் நிறுவனங்கள் விற்கின்றன. விவசாயிகளுக்கு வேறு வழியில்லை, வாங்கித்தான் ஆக வேண்டும். தக்காளி விதை 10 கிராம் வழிஇல்லே! இனி நம் உழவனின் வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு உதவுமா, தாராளமயமும், தனியார்மயமும்?
பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே இருக்கும். “பசுமை புரட்சி காலத்தில் இங்கே விளைந்த பருத்தியால் பஞ்சாலைகள் வளர்ந்தன. ஆனால் பருத்தி விவசாயம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தற்போதும் கோழிக்கும், மாட்டுக்கும் தீவனமாக மக்காச்சோளம் உள்ளது. நடும்போது இருக்கும் விலை அறுவடையின்போது இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதலும் இல்லாததால், தீவன நிறுவனங்களின் சின்டிகேட் வெற்றி பெருகிறது. இதுவே கடந்த பத்தாண்டுஅனுபவம். இனி பயிர் செய்யலாமா, மக்காச்சோளம் வேண்டாமே என்பதே உழவர்களின் எண்ணமாக மாறி வருகிறது. காய்கறிகள் விலைவிழ்ச்சியையே சந்திக்கிறது. பெரும் மழையால் விலை ஏற்றம், அதுவே பேசப்படுகிறது. நீண்ட கால பயிர் தென்னையும், ரூகோஸ் அமெரிக்கன் வெள்ளை ஈ தாக்குதலும் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அதைவிட வரியற்றதகுதியில்லா நிறுவனங்கள் மூலம் இறக்குமதியும், தென்னை விவசாயமும் பாதிக்கிறது. எல்லா வகையிலும் பாதிக்கப்படும் உழவு தொழில் வளர்ச்சி பெற பழைய பொலிவோடு வோளாண்மை பல்கலைக்கழகமும், சாமானிய விவசாயிகளும், வோளாண்மை களபணியாளர்களும் இணைந்து செயல்படுவது அவசியமானது. இடையில் கொள்ளையிடும் பெரும் நிறுவனங்களை விரட்டி அடிக்க வேண்டியுள்ளது. நம் பகுதி விவசாயம் செழித்திட, உணவு உற்பத்தி பெருகிட, ஒன்றிய அரசின் கொள்கையில் மாற்றம் காண வைக்க வேண்டும்.