திருப்பூர், நவ.23- அனுப்பர்பாளையத்தில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளியன்று நடைபெற்றது. திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தின் போலீஸ் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப் சார்பில் அனுப்பர் பாளையம் புதூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவி களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அனுப்பர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியில், 160 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டி யில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அனுப்பர்பாளையம் உதவி ஆணையாளர் பிரதீப் குமார், ஆய்வாளர் சசிகலா, சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞான பாண்டியன், மெல்லியா பள் ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் வி.பழனிசாமி, விஸ்வநாதன் உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.