districts

img

“விளையாடு இந்தியா”

                           கோவை, நவ. 18 –  கோவை விமானப்படை பயிற்சி பள்ளியில் மாணவர்க ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  விளையாடு இந்தியா (பிளே இந்தியா) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவை விமானப்படை பள்ளியில், மாணவர்க ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், தொடர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.  இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை விருந்தினராக பங்கேற்று துவக்கிவைத்தார். விமா னப்படை நிர்வாகக் கல்லூரியின் கமாண்டன்ட் ஏர் கமடோர் ஆர்.வி.ராம்கிஷோர் வரவேற்றார். கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில், விமானப்படை பள்ளியுடன் இனைந்து மற்ற 17 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.