districts

தான்தோன்றித்தனமாக செயல்பட்ட கோவில் செயல் அலுவலர் பிரச்சனையை திசைதிருப்பி பதற்றத்தை ஏற்படுத்திய இந்து முன்னணி

அவிநாசி, ஆக.21 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் சாக் கடை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த கோவில்  செயல் அலுவலருக்கு ஆதரவாக இந்து முன் னணியினர் புகுந்து கோயில் இடத்தை ஆக்கி ரமிப்பதாகத் திசை திருப்பி மறியல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தினர். திருமுருகன்பூண்டி நகராட்சி 22ஆவது  வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள் ளியிலிருந்து பொது கழிப்பிடம் வரை சாக் கடை கால்வாய் அமைப்பதற்காக ரூ.18 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பு துவங் கப்பட்டது. இந்நிலையில் மயில்வாகனம் என்ற இடத்திற்கு சாக்கடை கால்வாய் வரும் போது திருமுருகன் பூண்டி முருகன் கோவில்  செயல் அலுவலர் விமலா கோவிலுக்கு சொந் தமான இடத்தில் சாக்கடை கால்வாய் அமைப் பதாக எதிர்ப்பு தெரிவித்தார். எனவே இப்பணி  பாதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் மயில்வாகனம் அருகே குடியி ருப்பின் சாக்கடை  நீர் தேங்க துவங்கியது. இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் சாக் கடை நீரை தற்காலிகமாக உறிஞ்சும் தொட்டி  அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும்  அவரது கணவர், முறையாக நகராட்சி நிர்வா கத்திற்கு தகவல் ஏதுவும் தெரிவிக்காமல், தன் னிச்சையாக, சாக்கடைக்குழியை மூட முயற் சித்தனர். இதற்கு அருகில் இருந்த அப்பகுதி  மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து கோவில் செயல் அலு வலர் கணவர் அப்பகுதியைச் சேர்ந்தோரு டன் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடு பட்டார். இத்தகவல் அறிந்து திருமுருகன் பூண்டி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என கூறினர். எனினும் கோவில் செயல்அலுவலர் இந்து முன்னணியினருக்கு தகவல் தெரி வித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு திரண்ட இந்து முன்னணியினர் கோயில் இடத்தை அரசியல் கட்சியினர் ஆக் கிரமிக்க முயற்சிப்பதாக பொய்யான குற்றச் சாட்டைக் கூறி, பிரச்சனையை திசைதிருப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சாக்கடை குழியை மூடினர்.  

இதன் பிறகு அவர்கள் கலைந்தனர். மயில்வா கனம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கும், சாக்கடை குழி தோண்டியதற்கும் நான்கு  மீட்டர் இடைவெளி உள்ளது. மயில்வாகனம்  சிலை பழமை வாய்ந்த கற்களால் அமைக்கப் பட்டு பலமான நிலையில் உள்ளது. இருப்பி னும் இந்து முன்னணியினர் மயில்வாகனம் சிலை சாய்ந்து விட்டதாக பக்தர்கள் உணர் வைத் தூண்டிவிடும் நோக்கத்தில் விஷமத் தனமாகப் பொய் பிரச்சாரம் செய்தனர்.  கோயில் செயல் அலுவலர் பிரச்சனை இருந்தால் நேரடியாக நகராட்சி நிர்வாகத்து டன் பேசி உரிய முறையில் தீர்வு கண்டிருக்க லாம். ஆனால் அவர் பிரச்சனையை சிக்க லாக்கும் விதத்தில் இந்து முன்னணியினரை அழைத்து பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது  அப்பகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது. அடிப்படை வளர்ச்சிப்பணி  சார்ந்த விசயத்தை கோயில் இட ஆக்கிரமிப் பாக சித்திரித்து இந்து முன்னணியை துணைக்கு அழைத்த கோயில் செயல் அலு வலர் மீது அரசு நிர்வாகம் சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடன டியாக இங்கிருந்து நீக்க வேண்டும் என்றும்  பொது மக்கள் கூறினர். அத்துடன் இப்பகுதி குடியிருப்புத் தேவையான கழிவுநீர் கால்வாய் கட்டும்  பணியை முறையாக செய்து முடித்து பிரச்ச னையைத் தீர்க்க நகராட்சி நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள்  வலியுறுத்தி உள்ளனர்.