districts

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ உதகையில் சிறப்பு மருத்துவ முகாம்

உதகை, மே 22- குழந்தைகளுக்கான ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ்,  குழந்தைகளின் வளர்ச்சியை கண்ட றிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ என்ற புதிய திட் டத்தின் கீழ் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை சனியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் தார். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளை பார்வையிட்டார். இதுகுறித்து, சுகா தாரத் துறையினர் கூறியதாவது, இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோ தனை முகாம்கள் அனைத்து மாவட் டங்களிலும் ஒருமாத காலத்திற்கு நடைபெறும். இதன்மூலம் கடுமை யான மற்றும் மிதமான ஊட்டச் சத்துக் குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின்  வளர்ச்சிக்குத் தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும். மேலும்,  சிறப்பு மருத்துவப் பரிசோதனைக ளுக்குட்படும் குழந்தைகளின் விவ ரங்கள் அதற்கென வடிவமைக்கப் பட்டு உள்ள சிறப்பு செயலியில்  பதிவேற்றம் செய்யப்பட்டு கண் காணிக்கப்படும். மருத்துவப் பரி சோதனைகளுக்குப்  பிறகு ஊட்டச் சத்து மட்டும் தேவைப்படும் குழந் தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட் டச்சத்து திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமி நாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,  ஆ.ராசா எம்.பி,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி  திட்டத்தின் திட்ட இயக்குநர் அமுத வல்லி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்துகொண்டனர்.