districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

கோவை, செப்.29- சிறுபான்மை மக்களுக்கு எதி ராக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை கண்டித்து, கோவை யில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. சிறுபான்மை மக்களுக்கு எதி ராக கொண்டு வரப்பட்ட வக்பு  வாரிய சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்தும் மூன்று குற்றவியல் சட்டங்களை கண்டித்தும் சிறப்பு கருத்தரங்கம் சனியன்று கோவை மாவட்டம், ரத்தினபுரி மினிஹாலில் நடைபெற்றது. சிறுபான்மை மக் கள் நலக்குழுவின் கோவை மாவட் டக்குழு சார்பில் நடைபெற்ற கருத் தரங்கிற்கு, அமைப்பின் மாவட் டத் தலைவர் எம்.ஜெரோம் ரோட் ரிக்ஸ் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஏ.சாதிக் பாட்சா  வரவேற்றார். மாவட்டப் பொறுப்பா ளர் என்.ஆர்.முருகேசன், மாவட்ட பொருளாளர் கருப்பையா ஆகி யோர் கருத்துரையாற்றினர். மாநில துணைத்தலைவர் ப.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, அமைப்பின் ரத்தின புரி பகுதிக்குழுத் தலைவராக என்.ஆர்.முருகேசன், செயலாளராக குழந்தைராஜ், பொருளாளராக ஜெய் மேனியல் மற்றும் துணைத் தலைவர்கள் 8 பேர், துணைச்செய லாளர்கள் 8 பேர் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் டி.ஏ.சலீம் நன்றி கூறி னார்.