திருப்பூர், மார்ச் 29- திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஏப்.2 ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். இம்முகாமில் எழுத படிக்க தெரிந்த வர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ,தையல்பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெற லாம். தனியார் துறையில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையா கும். எனவே, வேலை தேடும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் தங்கள் சுய விவரக் குறிப்புடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் தெரிவித்துள்ளார்.