districts

img

ஆத்துப்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், ஆக. 24 -  கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பூர் ஆத்துப்பாளையம் மாநகராட்சி நடுநி லைப் பள்ளியில் சனியன்று நடந்தது. இதை மாநகராட்சி மேயர்  ந.தினேஷ்குமார் துவங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். மாநகராட்சி ஆணை யர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிர மணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் நல அலு வலர் கவுரி சரவணன், மருத்துவர் கலைச்செல்வன் உட்பட  பலர் பங்கேற்றனர்.  சித்தா பிரிவு உள்பட அனைத்து பிரிவுக ளும் என தனித்தனியாக மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச் சத்து தொடர்பான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட் டிருந்தன. திருப்பூர் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும்  நோய் தடுப்பு மருத்துவத் துறை இணைந்து இம்முகாமை நடத் தின.