தென்காசி, ஜூன் 2
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் 6ல் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்ததை சார்ந்த அனை த்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்க ளுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் , வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெற லாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.