நாமக்கல், ஜூலை 28- சிஐடியு நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு மாநாடு வியாழனன்று நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங் கள் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் நிறைவாக, உழைக் கும் மக்களின் 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, சென்னையில் பெருந்திரள் அமர்வு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டை வெற்றிகரமாக்குவது குறித்த சிறப்பு மாநாடு அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில், நாமக்கலில் நடைபெற் றது. சிஐடியு மாவட்டக்குழு அலுவல கத்தில் வியாழனன்று நடைபெற்ற மாநாட்டில், சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.சிங்காரவேலு, எல்பிஎப் மாவட்ட செயலாளர் ஆர்.சுந்தர மூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.ஜெயராமன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், ஐஎன்டியுசி பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, ஏஐடி யுசி மாவட்ட பொதுச்செயலாளர் தன சேகரன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இதில், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். சம வேலைக்கு சம ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண் டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.