உடுமலை, பிப்.28- உடுமலையில் சிறப்புப் பேரவை கூட்டம் மற்றும் அம்பேத்கர் விருது பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் பெ.சண்முகத்திற்கு புதனன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே.தண்டபாணி தலைமையில் உடுமலையில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டக்குழு உறுப்பினர் அ. பஞ்சலிங்கம் வரவேற்று பேசினார். மத் தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.மதுசூ தணன், கே. உண்ணிகிருஷ்ணன், நகரக் குழு உறுப்பினர்கள் தோழன்ராஜா, விஸ்வநாதன், எஸ்.வசந்தி, ஜஹாங்கீர், கருப்புசாமி, சித்ரா, கிளைச் செயலாளர் கள் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். முன்னதாக தமிழ்நாடு அரசின் டாக் டர் அம்பேத்கர் விருது பெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்சி யின் உடுமலை நகரக்குழு செயலாளர் தண்டபாணி தலைமையில் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்ற னர். இந்த சிறப்பு பேரவை கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்மு கத்திடம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூபாய் 2 லட்சத்து 51 ஆயிரத்து 980 ஐ உடுமலை நகரக்குழு நிர்வாகிகள் அளித்தனர்.