உதகை, ஜூன் 20– உதகையில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய் யும். இதேபோல் ஏப்ரல், மே மாதங்க ளில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும். இதன்படி தென்மேற்கு பருவ மழை சராசரியாக 700 மில்லி மீட்டர் மற் றும் வடகிழக்கு பருவமழை சராசரி யாக 300 மில்லி மீட்டரும், கோடைமழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், கடந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பதிவானது. இதற்கு இடையே ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளி போனது. கூடலூர், பந்தலூர், குன்னூர் ஒரு சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தாலும், தொடர்ச் சியாக இல்லாமல் நின்று விட்டது. இந்நிலையில், திங்களன்று முதல் ஊட்டி சுற்று வட்டார உள்பட நீலகிரி முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மதியம் 12 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங் காங்கே மழை பெய்து கொண்டே இருந் தது. இந்த மழை காரணமாக சாலை களில் ஆங்காங்கே வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. லேசான மண் சரிவு கள் ஏற்பட்டது. மேலும் குளிர் காற்று வீசியதால் பள்ளி கல்லூரி மாணவிகள் அவதி அடைந்தனர். இதேபோல் மதி யம் முழுவதும் சாலைகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் ஊட்டி குன்னூர் மசினகுடி மஞ்சுர் செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற னர். அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவு ஆனது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 82 சதவிகிதமாக இருந்தது. இதற்குப் பின்னர் மாவட்டம் முழுவ தும் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று காலநிலை ஆராய்ச்சி மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.