districts

img

மஞ்சள் நோய்-வெள்ளைப்புழு தாக்குதலால் சௌசௌ காய்கள் விளைச்சல் கடும் பாதிப்பு

திண்டுக்கல், ஜூன் 27- சிறுமலை சௌசௌ கொடியில் மஞ்சள் நோய் மற்றும் வெள்ளைப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், சிறு மலையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட சௌசௌ  கொடியில் மஞ்சள் நோய் தாக்குதல் காரணமாக சௌசௌ கொடிகள் பழுப்படைந்து காய்ந்து விடுகின்றன. இதனால் காய் களும் பெருக்காத நிலை உள்ளது. விவ சாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  சிறுமலையில் உள்ள விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத் தொழிலை செய்து வருகிறார்கள்/ கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலங்களில் முக்கனிகளில் பலா, வாழை மற்றும் எலுமிச்சை ஆகி யவை பயிரிடப்படுகின்றன. பலா, வாழை, எலுமிச்சை ஆகியவை 6  மாதங் களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு பலன் தரக்கூடியதாக உள்ளது. தற் போது காய்கறிகளை சிறுமலை விவ சாயிகள் பயிரிட்டு வருகிறார்கள். சௌசௌ காய், பீன்ஸ், அவரை  போன்ற காய்கறிகளை பயிரிட்டுள்ள னர். சௌசௌ காய்களை தினசரி  பறித்து திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்று ஓரளவு வருமானம் ஈட்டி வந்த னர். இந்நிலையில் தற்போது சௌசௌ  கொடியில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கு தலால் இலைகள் பழுப்புநிறமாகிறது. பின்னர் கொடிகள் பழுத்து காய்ந்து விடுகின்றன.  வெள்ளைப்புழு தாக்குதல்  இதே போல் சௌசௌ காயில் வெள்ளைப்புழு தாக்குகின்றன. இதனால் சௌசௌ காய் நன்கு சதைப்பற்றுடன் பெருத்து பளபளப்பு தருவதற்கு பதிலாக சுருங்கி, சிறிய அளவில் காய்கள் முற்றி காணப்படுகின்றன. இது போன்ற காய்களால் அடுத்து விதைகள் உரு வாகாத நிலை. இதுவரை தாங்களே  விளைவித்த கொடியில் காய்த்த கொடி யிலிருந்து முற்றிய சௌசௌ காயி லிருந்து விதையை தயாரித்து விவசா யம் செய்து வந்த விவசாயிகள் தற்போது விதையை ஊட்டி, கொடைக் கானல் போன்ற பகுதிகளில் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இழப்பீடு வழங்க கோரிக்கை இந்த பாதிப்பு குறித்து சௌசௌ விவசாயி சிவா மற்றும் தியாகு ஆகி யோர் கூறுகையில்,  சிறுமலையில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேல்  சௌசௌ விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் பிற மலைகளில் விளையும் சௌசௌ கொடியில் இதுபோன்ற நோய் தாக்குதல் வருவதில்லை. சிறு மலையில் மட்டும்தான் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நோய் தாக்குத லால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நோய் எப்படி வருகிறது, இத னை எப்படி தடுப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு என்ன பூச்சி  மருந்து அடிப்பது என்றும் தெரிய வில்லை. விவசாய துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த நோயை கட்டுப் படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை களை வழங்க வேண்டும். மண் வளம் குறித்த பரிசோதனைகள் செய்ய வேண்டும். நோய் தாக்குதலால் மக சூல் பாதிக்கப்பட்டுள்ளது. கொடிகளை அழித்து புதிதாக சௌசௌ பயிரிட வேண்டும். மேலும் இந்த சௌசௌ பயிருக்கு உரம் வைப்பது, பூச்சி மருந்து அடிப்பது போன்றவைகளால் விவசாயிகள் லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளனர்.  இந்த பணத்தை இழப்பீடாக வழங்க தமி ழக அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். (நநி)