districts

img

சமூக நலத்துறை விழிப்புணர்வு கருத்தரங்கம்

தருமபுரி, ஜன.29- தருமபுரியில் மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் வரவேற்றார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தருமபுரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இணை இயக்குநர் எம்.சாந்தி, துணை இயக்குநர் எழிலரசு, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து, பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார். மேலும், சிறப்பாக களப்பணியாற்றிய சுகாதார பணியாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.