districts

img

தொழில்நுட்பம் வளரும் அளவிற்கு சமூக மனநிலை வளரவில்லை

கோவை, ஜூன் 23- பெண்கள் குறித்த அடிப்படைகள் மாற வேண்டும். அப்போதுதான் முழு மையான பாதுகாப்பு கிடைக்கும். தொழில் நுட்பம் வளர்ந்த அளவிற்கு சமூக மனநிலை வளரவில்லை என திமுக மகளிர் அணி தலைவரும், தூக் துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரு மான கனிமொழி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தேசிய வலைதள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் (National cyber  security research council) மற்றும் மாநில மகளிர் ஆணையம் இணைந்து கோவை, அவிநாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் டெக்ஸ் டைல் கல்லூரி அரங்கில், பெண்க ளுக்கு எதிரான சைபர் குற்றம் தொடர் பான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில், நாடா ளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தேசிய வலைதள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் காளிராஜ்,மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகர காவல் ஆணையர் வெ.பால கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்று கனி மொழி எம்.பி., பேசுகையில், பெண் கள் குறித்த அடிப்படைகள் மாற  வேண்டும். அப்போதுதான் முழுமை யான பாதுகாப்பு கிடைக்கும். பெண் கள் பாதுகாப்பான சூழல் அடையும் வரை நம்மை எப்படி நாம் பாதுகாத் துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை. தொழில்நுட்ப மும்  அதைப் பற்றிய புரிதலும் அவசி யம். இன்டர்நெட்டில் பகிர்ந்த பதிவை எடுக்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும். இன்டர்நெட்டில் ஒரு விஷ யம் வெளியே வந்து விட்டால் என் வாழ்க்கை அழிந்து விடும் என நினைப் பது தவறு. அப்படியான சூழலில் தான் பெண்கள் உள்ளனர். ஆனால், இதை எடுக்க முடியும். ஆகவே, இது  போன்ற நிகழ்வுகள்  பெண்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும். ஒரு  பெண் பத்திரிக்கையாளர், எழுத்தா ளர், கருத்தை வெளியிடும்போது அதற்கு உள்ள எதிர் வினைகள் அவர் களை தனிமனித தாக்குதலுக்குள் நடத்துகிறது. மிகவும் தரமற்ற வார்த் தைகளை கொச்சைப்படுத்தி பேசும்  சூழல் உள்ளது. இப்படி பேசுபவர்கள் நிறுத்தும் வரை நாம் கருத்துக்கள் தெரிவிக்காமல் இருக்க முடியுமா. ஆகவே, பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படு கிறது. கோவை மாநகர காவல் துறை யின், “போலீஸ் அக்கா” நிகழ்வு  பாராட்டுக்குரியது. பெண்கள் குறித்த அடிப்படைகள் மாற வேண்டும். அப் போதுதான் முழுமையான பாது காப்பு கிடைக்கும், என்றார்.