districts

img

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட சமூக நல்லிணக்க பேரணி

திருப்பூர், டிச. 12 - அம்பேத்கர்  நினைவு  தினம் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட, சமூக நல்லிணக்க பேரணி திருப்பூரில் நடைபெற்றது.  திங்கட்கிழமை திருப்பூர் குமரன் சிலை அருகில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகில் முடிவடைந்தது.விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செய லாளர் அ.தமிழ்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செய லாளர்  செ.முத்து கண்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர்  எம்.ரவி,  திராவிடர் விடுதலை கழக மாவட்ட  தலைவர் முகில் ராசு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநகர் தலைவர் சண்.முத்துக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கனகராஜ், இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணி  உட்பட ஏராளமானோர் இந்த பேரணியில் பங்கேற்று சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.