பாம்பை அடித்து கொன்றவர் கைது
கோவை, அக்.21- பாம்பை அடித்து கொன்றவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விஜி. இவர், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட சூலூர், காடம்பாடி பகுதியில் கட்டு மான தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில், தான் வேலை செய்யும் இடத்தில் சாரை பாம்பினை பிடித்து, கையால் அடித்து கொன்றார். இதன் காணொளி காட்சிகளை, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, கோவை வனசரகர் தலைமையி லான குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வன குற்ற வழக்குப் பதிவு செய்து சூலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப் பட்டார். இதன்பின், பாம்பினை கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972, பிரிவு 9 மற்றும் 51 இன் படி நீதிமன்ற காவலில், கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி பாம்புகள் பாதுகாக்க பட வேண்டிய உயிரினம். அதனை துன்புறுத்தி சமூக வலைத் தளத்தில் பதிவேற்றுவதும், அடித்து கொல்வதும் தண்ட னைக்குரிய குற்றம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தீப்பற்றி எரிந்த ஆம்னி வேன்
கோவை, அக்.21- கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கோட்டூர் அங்கலக்குறிச்சி போன்ற பகுதிகளில் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு ஆம்னி வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யாத்திரிரைக்காக சென் றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற ஓட்டுநரை பால் விநியோகம் செய்ய நியமித்து உள்ளார். இந்த நிலையில் ஓட்டுநர் முரளி ஆம்னி வேனில் பால் விநியோகம் செய்வதற்காக வெள்ளியன்று ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி ராமர் கோவில் வீதியில் வேனில் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஆம்னி வேன் பின் பகுதி யில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக்கண்ட முரளி உடனடி யாக வேனை அங்கேயே நிறுத்தியுள்ளார். பின்னர், அருகாமையில் உள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கி ஊற்றுவ தற்குள், தீ வேகமாக பற்றி எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்ததின் பேரில் நிலைய அலுவலர் கணபதி தலைமை யில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
வரத்து குறைவால் ஆடுகள் விலை உயர்வு
தாராபுரம், அக்.21- ஆடுகள் வரத்து குறைவால் கன்னிவாடி சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்தது. தாராபுரம் அடுத்த கன்னிவாடி ஆட்டு சந்தை தமிழகத்தில் முக்கியமான ஆட்டு சந்தையாகும். இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங் களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. இதனால் கன்னி வாடி ஆட்டுசந்தைக்கு கடந்த 3 வாரங் களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இத னால் ஆடுகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவை யான தீனிகள் போதிய அளவில் இருப்ப தால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடு களை விற்க விவசாயிகள் ஆர்வம் காட்டாத தால் கன்னிவாடி ஆட்டுசந்தை ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதன் அடிப் படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.100 அதிகரித்து ரூ.750க்கு விற்பனை செய்யப் பட்டது. அதன்படி 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500க்கு விற்பனையானது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரம் ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல் விடுதி காப்பாளர் சங்க பேரவை தீர்மானம்
தருமபுரி, அக்.21- விடுதி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என விடுதி காப் பாளர் சங்க தருமபுரி மாவட்டப் பேரவை வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதி காப்பாளர் சங்க, மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தேவன் தலைமை வகித் தார். மாவட்ட நிர்வாகிகள் எம்.வேணு, ஆர். மூர்த்தி, எம்.அன்பழகன், எஸ்.தினமணி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தருமபுரி மாவட்டத்தில் விடுதிகளில் காலி யாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பேரவையில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை விடுதி காப்பாளர் சங்கத் தின் தருமபுரி மாவட்டத் தலைவராக எஸ். பச்சியப்பன், செயலாளராக ஜி.எம்.சங்கர், பொருளாளராக ஏ.மணிவண்ணன், துணை தலைவர்களாக எம்.மகேஷ்குமார், டி. மணிகண்டன், துணைச் செயலாளர்களாக என்.மாரியப்பன், பி.பச்சியப்பன், இணைச் செயலாளர்களாக கே.பொன்னரசு, எஸ். சரவணன், பிரச்சாரச் செயலாளர் ஜெ.ஜெயக் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சாகசம் நிகழ்த்திய போர் விமானங்கள்
கோவை, அக்.21- வானில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பள்ளி மாணவர்கள் கண்டுகளித் தனர். கோவை, சூலூர் விமானம் படைத்தளத்தில் போர் விமா னங்களின் சாகச நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதனை கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேரில் கண்டு களித்தனர். இதில், தேஜஸ், எம்.ஐ-17, சாரங் உள்ளிட்ட அதி நவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மாணவர்களின் பார் வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. உபகரணங்களின் பயன் பாடுகள் குறித்து விமானப்படை வீரர்கள், மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். விமானப்படை நிகழ்வை நேரில் கண்டுகளித்த மாணவ - மாணவிகள் கூறுகையில், விமானங்களை அருகில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது புதிய அனுபவமாக இருந்தது. போர் விமானங்களில் வீரர்கள் நிகழ்த்திய சாகசங்களை வியப்புடன் பார்த்து மகிழ்ந்தோம். இந்திய விமானப்படையின் செயல் பாடுகள் குறித்து இது நல்ல வாய்ப்பாக அமைந்தது என தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்
தருமபுரி, அக்.21- தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நட மாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஹள்ளி கிரா மத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவ சாய நிலங்களில் சிலர் தங்களது குடும்பத் துடன் விவசாயம் செய்து வசித்து வரு கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங் களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணி களை அடித்து சென்றுள்ளது. திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்தி ருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல் போனில் படம் பிடித்துள்ளனர். இதனை யடுத்து அதனை உற்றுப்பார்த்தபோது, அது சிறுத்தை என தெரிய வந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பாலக்கோடு வனத் துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சி கள் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்டஹள்ளி பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத் துறையினர் சுழற்சி முறையில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சிறுத்தை இரவு நேரங்களில் விவ சாய நிலங்களில் இருக்கும் குடியிருப்பு களை நோக்கி சிறுத்தை வந்து செல்வதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, பாலக்கோடு வனச் சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வரு கின்றனர். இதில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், மேலும் வளர்ப்பு பிராணிகளை பாது காப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். அதேபோல் வன விலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடி குண்டுகள் வைப்பது போன்ற வன விலங்கு களை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடு பட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.