districts

img

அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்

திருப்பூர், ஆக. 2 - திருப்பூர் மாநகராட்சி, 44 ஆவது வார்டு, பழைய நகர் அரசு  நடுநிலைப்பள்ளி மற்றும் செல்லப்பபுரம் அரசு நடுநிலைப்  பள்ளி ஆகியவற்றில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறந்து வைக் கப்பட்டன.திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி  மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “ஸ்மார்ட் கிளாஸ்” வகுப்ப றையினை செவ்வாயன்று திருப்பூர்  தெற்கு சட்டமன்ற உறுப் பினர் க.செல்வராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேயர்  ந.தினேஷ்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.