உடுமலை, ஜன.18- உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் சிறுதானிய சகுபடி சூடுபிடித் துள்ளது. எனவே சிறுதானியங்கள் சாகு படி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீப காலமாக சிறுதானிய உணவு கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வரு வதால் கம்பு, சோளம், ராகி, சாமை, தினை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதா னியங்களுக்கான தேவை அதிகரித்துள் ளது. இதனால், சிறுதானியங்கள் சாகுப டியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். உடுமலை, குடி மங்கலம் வட்டாரங்களில் தென் மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக் குப் பருவமழைக் காலங்களில் மானா வாரியில் அதிக அளவில் சிறுதானியங் கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந் தது. காலப்போக்கில் சிறுதானியங்க ளுக்கான தேவை குறைவு மற்றும் போதிய விலை கிடைக்காத நிலை ஏற் பட்டது. இதனால் பல விவசாயிகள் சிறு தானிய சாகுபடியைக் கை விட்டு விட்ட னர். தற்போது மீண்டும் சிறுதானி யங்களுக்கு மவுசு கூடியுள்ளது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதனால் சிறுதானியங்க ளுக்கு நல்ல விலை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக சிறுதா னிய சாகுபடிக்கு அதிக அளவில் தண் ணீர் தேவையில்லை. எனவே வறட்சி யான பகுதிகளுக்கு ஏற்ற பயிராக சிறுதா னியங்கள் உள்ளது. விதைப்பு சமயத் தில் விதை முளைக்கும் அளவுக்கு மண் ணில் ஈரப்பதம் இருந்தால் போதும். பின்னர் சரியான மழை இல்லாவிட்டால் கூட பயிர் பிழைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் போதுமான அளவில் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது நல்ல மகசூல் கிடைக் கும். நாட்டு ரகங்கள் சாகுபடி செய்யும் போது பூச்சி, நோய் தாக்குதல் பெரிய அளவில் இருக்காது. கிளி உள்ளிட்ட பற வைகள் முற்றிய கதிர்களை சேதப்படுத் துவதுண்டு, ஆனாலும் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சியினங் களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பறவைகளுக்குக் கொடுக்கும் கூலியாக அதனை நினைத்துக் கொள்ள லாம். சிறுதானிய சாகுபடியில் மட்டு மல்லாமல் அனைத்து விளைநிலங்களி லும் பறவைத் தாங்கிகள் அமைத்து பற வைகள் உட்காருவதற்கு வழி செய்து கொடுப்பதன் மூலம் பூச்சி தாக்குத லைத் தவிர்க்கலாம். சிறுதானிய சாகுப டியில் அறுவடையின் போது அதிக எண் ணிக்கையில் கூலி ஆட்கள் தேவைப்பட் டது. ஆட்கள் பற்றாக்குறை நிலவி வந்த தும் பலரும் சிறுதானிய உற்பத்தியைக் கைவிடுவதற்குக் காரணமாக இருந் தது. அறுவடைக்கு தற்போது நவீன எந் திரங்கள் வந்து விட்டதால் சிறுதானிய உற்பத்தியில் இறங்கியுள்ளதாகவும், வேளாண்மை துறை சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.