districts

img

கருத்து வேறுபாடுகளை கடந்து பாஜகவை வீழ்த்த சூளுரை

அவிநாசி, செப்.8– ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பொது எதிரியான பாஜகவை வீழ்த்து வோம் என பல்வேறு அமைப்பின் நிர் வாகிகள் சூளுரைத்தனர். அவிநாசி செங்காடு திடலில் மே 17  இயக்கம் சார்பில், தோழன் திப்பு சுல் தான், தீரன் சின்னமலை, மாவீரன்  பொல்லான் மூவரையும் இணைத்து,  “வாருங்கள் வரலாறு பேசுவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திரு வள்ளுவன் பேசுகையில், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவ தாக பேசப்படுகிறது. இந்தியா என்று  சொன்னால் அதில் ஒரு வரலாறு  இருக்கிறது. பாரத் என்று சொன் னால் அதில் புராணங்களும், இதிகா சமும் இருக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவது பல்வேறு தேசிய இனங்களின் வரலாற்றை அழிக்கும் முயற்சிதான். தீரன் சின்ன மலை, திப்பு சுல்தான் இருவருக்கும்  ஒற்றை எதிரியாக வெள்ளைக்காரன் இருந்தான். இவர்கள் இருவரும் சாதி, மதம் கடந்து கைகோர்த்தனர். அதேபோல நாமும் தமிழராய் கைகோர்ப்போம் என்றார். கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பேசுகையில், தற் பொழுது நாடாளுமன்றத் தேர்தலு டன் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று  சொல்கிறார்கள் 2024இல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்து  தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம் தான். தேர்தல் ஆணையத்தை கலைத்து விடுவார்கள். இந்துத்துவா பாசிச ஆட்சி நிறுவப்பட்டால் நம் மால் அகற்றுவது சிரமம். பாசிச கருத் துக்களை தகர்த்தெறிவதற்கு அணி சேருவோம் என்றார். இதையடுத்து மே 17 இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் திருமுரு கன் காந்தி பேசுகையில், திமுகவா, அதிமுகவா என்பதல்ல பிரச்சனை. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரை தலையை சீவ வேண்டும் என்று கூறுவது என்ன துணிச்சல்? எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை தமிழ் இனத்தின் இழிவு சின்னமாக இருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடிய அனைவரும் துரோ கிகள்தான். சாதி, மதம் கடந்து சனா தனத்தை குழி தோண்டி புதைப் போம் என்றார்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரமூர்த்தி, மதிமுக பெருமாள், பெரி யார் திராவிட கழகம் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.