districts

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடுக

சேலம், மார்ச் 21- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் உறுதி அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய அடிப்படையில் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும்  பதிவுரு எழுத்தர் பதவி உயர்வுக்கான தகுதி  காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுகள் தாமதமின்றி வழங்க வேண்டும். 2021 சட்ட மன்றத் தேர்தல் செலவினங்களை நடப்பு நிதி ஆண்டு நிறைவடைவதற்குள் வழங்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத் திற்கு ஏற்ப புதிய கிராமம், உள்வட்டம், கோட்டம் மற்றும் மாவட்டங்கள் உரு வாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலை வர் வள்ளிதேவி தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்த்த னாரி, மாவட்ட பொருளாளர் முருகபூபதி, மாவட்ட இணைச் செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ச.முருகதாஸ் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் ப.தங்க வேல், மாவட்ட துணைத்தலைவர் சீ.உஷா ராணி, மாவட்ட இணைச் செயலாளர் டி. செல்வி உள்ளிட்ட திரளான வருவாய்த் துறையினர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட துணைத்தலைவர் ப.சிவகுமார் நன்றி கூறினார். இதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), அவிநாசி, ஊத்துக்குளி, பல்ல டம், காங்கயம், தாராபுரம், உடுமலை மற் றும் மடத்துக்குளம் ஆகிய வட்டங்களிலும் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக, மார்ச் 23 ஆம் தேதி அன்று அனைத்து மாநில நிர்வாகிகளும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.