districts

img

வர்ணாசிரமத்திற்கெதிராக வண்ணமய வாழ்க்கைக்கு போராடுவோம்!

திருப்பூர், ஜூன் 26- பிறப்பின் அடிப்படையில் மனிதர்க ளைப் பிரிக்கும் வர்ணாசிரமத்திற்கு எதிராக, மனிதர்களை இணைக்கக் கூடிய,  வண்ணமயமான வாழ்க் கையை படைக்கும் கலை இலக்கியப்  பணியே இன்றைய முக்கியமான தேவை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ம. மணிமாறன் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர்  மாவட்டம் 15ஆவது மாநாடு ஞாயி றன்று யுனிவர்சல் ராஜகோபால் நினைவு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வுகளை  நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் மு.ஜீவானந்தம் பறையிசை அடித்து தொடக்கி வைத்தார். தோழர் கள் நன்மாறன், கருப்பு கருணா நினைவு நுழைவாயில் பகுதியில் சங்க  கொடியை மாநில செயற்குழு உறுப்பி னர் இரா.ஈஸ்வரன் ஏற்றி வைத்தார். இசைக் கலைஞர்களின் பாடல்கள் இடம் பெற்றது. 

மதமும், அரசியலும் தனித்து இருக்க வேண்டும்

இதனைத்தொடர்ந்து சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ம. மணிமாறன் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கலை இலக்கியம்  மக்கள் சார்பானது. சார்பற்றவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் எந்தப்  பக்கமும் சார்பற்றவர்கள் என்ற குரல் தற்போது உலகம் முழுவதும் எதிரொ லிக்கிறது. கார்ப்பரேட்மயம் தற்போது  மனிதர்களை தன்னை பற்றி மட்டும்  யோசிக்க கூடியவர்களாக, எப் போதும் ஒரு பதற்றத்திலேயே  வைத்தி ருக்கிறது. அதைத் தணிப்பதற்கு என்று  சொல்லி கார்ப்பரேட் சாமியார்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதைப் பற்றி நம் படைப்புகள் அதிகமாக வர  வேண்டும். திருப்பூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முற்போக்குத் தமிழ் மரபை  முன்னெடுப்போம் என்று மைய முழக் கத்தை உருவாக்கினோம். அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது தனித் துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை என்ற முழக்கத்தை வைத்திருக்கிறோம். நம் தமிழ் மண் ணிற்கு மொழி, பண்பாடு, இலக்கியம் என பல்வேறு தனித்தன்மைகள் உள் ளன. இவை நமது உரிமை. அதே சம யம் பல வண்ணங்களைக் கொண்ட நமது பன்மைத்துவம் வலிமை. இவ்வ ளவு பன்மைத்துவம் கொண்ட வாழ்க்கை உலகில் வேறு எங்கும் இல்லை. சமகால அரசியலை, நிகழ்வு களை கவனிக்காமல் ஒரு படைப்பு உரு வாகிவிட முடியாது. மதமும், அரசிய லும் தனித்து இருக்க வேண்டும். அவை  இரண்டும் எப்போது இணைகின்ற னவோ, அப்போது மக்களின் வாழ்வு அச்சம் சூழ்ந்ததாக மாறிவிடும். சாமா னிய மக்களுக்கு விடிவு இல்லை. நமது இயக்கத்தில் பெண்களை மிகப் பெரும் பாய்ச்சல் வேகத்தில் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு உரிய இடத்தை கொடுக்கும்போது வாழ்க்கை வண்ணமயமானதாக மாறும். 

உலகிலேயே மிகவும் கடினமா னது, மனித மனங்களை வெல்வது  தான். ஆனால் கலை இலக்கியத்திற்கு  மனித மனங்களை வெல்லும் பேராற் றல் இருக்கிறது. எனவே, அத்தகைய மகத்தான படைப்புகளை நாம் உரு வாக்க வேண்டும். இலக்கியம் படைக்க முடியாதவர்கள், நம் பக்கத் தில் இருக்கும் மனிதர்களுடன் பேச வேண்டும். அத்தகைய பேச்சுக்கு உலகை மாற்றும் வல்லமை உண்டு என்றார்.  இதைத்தொடர்ந்து மாவட்ட தலை வர் பி.ஆர்.கணேசன் கலை இலக் கிய அறிக்கையை முன் வைத்தார். பண்பாட்டு அறிக்கையை மாநில குழு உறுப்பினர் கோவை சதாசிவம், செயல் அறிக்கையை மாவட்டச் செய லாளர் இரா.குமார், வரவு செலவு அறிக் கையை மாவட்ட பொருளாளர் என். ராமசாமி ஆகியோர் முன் வைத்த னர். முன்னதாக கலை இலக்கிய பெருமன்ற தலைவர் பி.ஆர். நடராச ன் வாழ்த்திப் பேசினார். பிரதிநிதிகள் விவாதத்தை தொடர்ந்து, திருப்பூரில் திருவள்ளு வர் சிலை அமைக்க வேண்டும். கணி யாம்பூண்டி தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள இடத்தில் அகழாய்வு பணியை துவக்க வேண்டும். திருமுரு கன்பூண்டியில் சிற்பக் கலை பயிற்சி  கல்வி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும். கொடுமணல் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் கிடைத்த தொல்பொருள் களை ஈரோடு சென்னிமலை அல்லது காங்கேயம் ஏதேனும் ஒரு பொருத்த மான இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

திருப்பூரில் கலை இலக்கிய பொது நிகழ்வுகள் நடத்துவதற்கு டவுன்ஹால் புதுப்பிக் கப்பட்ட கூட்ட அரங்கில் அனுமதி வழங்க வேண்டும். நஞ்சராயன் குளத் தில் பறவைகள் சரணாலயம் அமைக் கும் பணியை விரைவு படுத்த வேண் டும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய பணி தளி எத்த ளப்பருக்கு மணி மண்டபம், பகுத் தறிவு கவிராயர் நாராயணகவி சிலையை பூளவாடியில் அமைக்க  வேண்டும். நாட்டுப்புற கலைஞர்க ளுக்கு பயணம் செய்ய உரிய பாது காப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் மாவட்ட தலைவ ராக பி.ஆர்.கணேசன், மாவட்டச் செய லாளராக ஆர்.குமார், மாவட்டப் பொருளாளராக என்.ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர்களாக மா. நாட்டராயன், செ.நடேசன், இ.அங்கு லட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் களாக வேலா.இளங்கோ, தோழன் ராஜா, ஜெயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேற்கண்ட 9 பேர் நிர்வாகிகள், 8 பேர் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 41 பேர்  கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டது. இதன் நிறைவாக வெள்ளியங் காடு நால்ரோடு, எழுத்தாளர் கு.சின் னப்பபாரதி நினைவு திடலில் கலை இரவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மொத்தம் 130 பிரதிநிதிகள் இம்மா நாட்டில் கலந்து கொண்டனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் அ.லட்சு மிகாந்தன் மாநாட்டை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.