districts

img

ராகேஷ் திக்காயித் மீது பாஜகவினர் தாக்குதல்: திருப்பூரில் எஸ்கேஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 2 -  ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) தலைவர்களில் ஒரு வரான ராகேஷ் திக்காயித் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி யதை கண்டித்து திருப்பூரில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த மே 30 அன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரூ நிகழ்ச்சி ஒன் றில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திக்காயித் கலந்து கொண் டார். அந்த நிகழ்ச்சியில் பாஜக குண்டர்களால் அவர் தாக்கப்பட் டார்.  இதனை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்க ளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட எஸ்கேஎம் மாநில அமைப்பு அழைப்பு விடுத்தது. அதன்படி, திருப்பூர் குமரன் சிலை முன்பாக வியாழன் அன்று மாலை  ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட எஸ்கேஎம் ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார்,தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.கே. கொளந் தசாமி, எஸ்.வெங்கடாசலம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட் டோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பட்டதில் விவசாயி கள் பங்கேற்று பாஜகவின்  இந்த கொலைவெறி செயலை கண்டித்து முழக்கமிட்டனர்.