சேலம், மே 11- தோழர் வி.பி.சிந்தனின் 35 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, சிஐடியு சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான வி.பி.சிந்தனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ரத்ததான முகாமை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி எம்.ரவீந்திரன் துவக்கி வைத்தார். இதில், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஏ.கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.