districts

img

மானாமதுரையில் மதிமுக நகர் செயலாளர் பொறியாளர் கண்ணன் தலைமையில் கையெழுத்து இயக்கம்

தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் தமிழக ஆளுனரை திரும்பப்பெற வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மதிமுக நகர் செயலாளர் பொறியாளர் கண்ணன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா, திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.