கோவை, டிச.24- மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கள் கிடைக்கப்பெற்றதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கோவை யில், மெட்ரோ ரயில் பணிகள் முடிக் கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக் கோவையில் செவ் வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாநகரப் பகுதியில் அவிநாசி சாலை மற்றும் சத்திய மங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது. அதற்கான ஆயத்த பணி கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று கோவையில் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து எம்.ஏ. சித்திக் செய்தியாளர்களிடம் பேசு கையில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகி உள்ளது. இதில், சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மேட்டூரில் திட்டம் அமையும். அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பத்து ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. நீலாம் பூர் பகுதியில் டிப்போ அமைப்ப தற்கு தனியாக 16 ஹெக்டர் நிலம் தேவைப்படும். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அடுத்த டுத்து நடைபெறும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகி யவற்றுக்கான ஒப்புதல்கள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக் குள் பணிகள் முடிக்கப்படும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்லும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரையை விட கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக முடிவடையும். கோவை, மதுரை ஒருங்கிணைந்த திட்டமாக தயா ரித்து வருகிறோம். நிலம் எடுப்பதில் தேவையான பணிகளை செய்து வருகிறோம். மெட்ரோவிற்கான இடத்தின் தேவை குறைக்க திட்டமிட்டு உள்ளோம். இடம் எடுப்பவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படும். மேலும், அவிநாசி மேம்பாலம் புதிய அறிவிப்பு மன தில் வைத்தும், வருங்காலத்தை மனதில் வைத்து மெட்ரோ அவி நாசி சாலை ஒட்டி திட்டமிட்டுள் ளது. ரெகுலர் மெட்ரோ தான் கோவைக்கான திட்டம். 3 கோச் என்ற அளவில் சுமார் 700 பேர் வரை பயணிக்கும் அளவிற்கு திட்ட மிட்டுள்ளோம் என்றார். முன்னதாக இந்த ஆலோ சனைக்கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலி யாசர், கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாக ரன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா,உதவி ஆட்சியர்(பயிற்சி) அங்கித் குமார் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.