districts

நீர்வழிப்பள்ளத்தில் பன்றி குடிசைகள் சுகாதார சீர்கேடு நிலவுவதால் அகற்ற வேண்டும் - சிபிஎம்

திருப்பூர் ஜூன் 3 - உடுமலைப்பேட்டை தாலுகா, குரல்  குட்டை ஊராட்சியில் சுகாதார சீர்கேட்டை  தடுத்திட நீர்வழிப் பள்ளத்தில் அமைக் கப்பட்டுள்ள பன்றி குடிசைகளை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் உடு மலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த  மனுவில் தெரிவித்துள்ளதாவது, உடுமலைப் பேட்டை தாலுகா குரல்குட்டை கிராமத்தில் மடத்தூரிலிருந்து மலையாண்டிபட்டினம் வரை உள்ள தெற்குப் பள்ளத்தில் (புல.எண்  166) பன்றிக் குடிசைகள் அமைத்து நூற்றுக் கணக்கான பன்றிகள் வளர்த்து வரு கின்றனர். இதனால், துர்நாற்றமும், சுகாதார சீர் கேடும் ஏற்படுகிறது. மழைக் காலத்தில் மழை நீரோடு, சேறும் சகதியுமாக குரல்குட்டை யின் கிழக்கு பகுதியில் கடுமையான துர் நாற்றம் வீசுகிறது.  மேலும், பள்ளத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையும் (செக்டேம்) பன்றிகள்  சேற்றில் புரள்வதற்காக சேதப்படுத்தப்பட் டுள்ளது.  இதனால், தண்ணீரை தேக்கி வைக்கவும்  முடியவில்லை. பன்றிகளுக்கு கெட்டுப் போன உணவுகளை டப்பாக்களில் அள்ளிச்  செல்வதால் கடும் நாற்றத்தால்  அந்தப் பகுதி  மக்கள் கடுமையான வாந்தி, குமட்டல் ஏற் பட்டு குழந்தைகள் உட்பட பாதிக்கப்படு கின்றனர்.  மேலும், பன்றிகளை வாகனத்தில் ஏற்றி  ஊருக்குள் வரும்போது கழிவுகளை சிந்திக் கொண்டே உதறியபடியே செல்வதால் சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து குரல் குட்டை ஊராட்சி கிராம சபையில் பல முறை மனு கொடுத்தும்  பள்ளத்தை அளந்து  பன்றி குடிசையை அகற்ற தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. உடுமலை ஊராட்சி ஒன்றியத்திலும் மனு  கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குரல்குட்டை நீர்வழிப் பள்ளத்தில் உள்ள பன்றிக் குடிசைகளையும், ஆக்கிர மிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்து  சுகாதாரம் காத்திட வேண்டும் என தெரி வித்துள்ளார்.