districts

img

சாஸ்திரி நகர் மக்களை அப்புறப்படுத்துவதா? ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ஈரோடு, ஜூன் 2- ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகரில் நீண்ட காலமாக குடியிருக்கும் ஏழை, எளிய மக் களை ரயில்வே நிர்வாகம் அப் புறப்படுத்தும் முயற்சியால் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள னர். ஈரோடு மாநகராட்சியின் 4 ஆவது மண்டலத்திற்குட்பட்ட காசி பாளையத்தில் சாஸ்திரி நகர் உள் ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்ட்ரல் திரையரங்கம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங் கிருந்த சுமார் 500 வீடுகள் தீக்கிரை யானது. அன்றாட கூலி உழைப்பா ளர்களான இம்மக்கள் வாழ்விடம் இழந்து தவித்தனேர். இதனைய டுத்து அங்கு வசித்த மக்களை சாஸ் திரி நகரில் உள்ள ரயில்வேத்து றைக்கு சொந்தமான நிலத்தில் குடி யமர்த்தப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் குடிசை அமைத்து இருந்த மக்கள் நாளடை வில் மின்வசதி, குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டது.

தற்போது இவர்கள் குடி யிருக்கும் வீடுகளுக்கு ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்து அவணங்களும் உள்ளது. இம்மக் கள் தங்களுக்கான வழிபாட்டு தளங் களாக கோவில், மசூதி, சர்ச் போன்ற வற்றையும் இங்கே கட்டி உள்ளனர். இந்நிலையில் திடீரென ரயில்வே துறையினர் இந்த இடம் ரயில் வேக்கு தேவைப்படுகிறது. உடனே குடியிருப்பை காலி செய்ய வேண் டும் என தெரிவித்துள்ளனர்.  மேலும், கடந்த 10 நாட்களாக வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இப்பகுதி மக் களை அழைத்து கூட்டம் போட்டுள் ளனர். இதில் பங்கேற்ற ரயில்வே  அதிகாரிகள் இரண்டு மாதங்களில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு நீங்களே காலி செய்யுங் கள். இல்லாவிட்டால் புல்டோசரை வைத்து நாங்களே இடித்து காலி செய்வோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சந்தித்து முறையிட்டுள்ளனர். அவ ரும் சாஸ்திரி நகரில் உள்ள அனைத்து வீடுகளையும் பாது காக்க நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்துள்ளார். அமைச்சரின் உறுதியின் பேரில் மக்கள் ஆறுதல் அடைந்திருக்கின்ற னர். ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு விற்று வரு கிறது ஒன்றிய மோடி அரசு. அப் பாவி ஏழைஎளிய சாஸ்திரி நகர் மக்க ளின் வசிப்பிடத்தையாவது விட்டு வைக்க வேண்டும் என்பதே அனை வரது எதிர்பார்ப்பு. -ராஜ்வேல்