ஜூலை. 14,15 தமிழக முதல்வர் கோவை வருகை - விழா ஏற்பாடுகள் தீவிரம்
கோவை, ஜூலை 6 – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 14 மற்றும் 15 இரு நாட்கள் கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். இதனையொட்டி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கோவை மாவட்டம், ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங் கேற்க உள்ளார். இதில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் குவது மற்றும் பல திட்டங்களை அறிவிக்க உள்ளார். இவ் விழாவிற்காக அமைக்கப்படும் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற் கான கால்கோள் நடும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் வரதராஜ், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பா ளர் மருதமலை எஸ்.சேனாதிபதி, மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட திர ளான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்விற் கான ஏற்பாடுகளை தமிழக மின்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி மேற் கொண்டு வருகிறார்.
சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
கோவை, ஜூலை 6- மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய் யும் மழை அளவு 66 மி.மீ ஆக பதிவாகியுள்ளது. அணை யின் மொத்த கொள்ளளவு 49.53 அடி. கடந்த 15 நாட்க ளுக்கு முன் 5.6 அடியாக இருந்த அணையின் நீர்மட் டம் தற்போது 18.04 அடியாக உயர்ந்துள்ளது. செவ்வா யன்று ஒரே நாளில் 2.5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஆவணப்பட இயக்குநருக்கு கொலை மிரட்டல் சஷ்டி சேனா நிர்வாகி கைது
கோவை, ஜூலை 6- ஆவணப்பட இயக்குநருக்கு கொலை மிரட்டல் விடுத்த சஷ்டி சேனா இயக்கத்தின் தலைவர் சரஸ்வதியை போலிசார் கைது செய்தனர். செங்கடல் மற்றும் மாடத்தி ஆகிய ஆவ ணப்படங்களை இயக்கியவர் லீனா மணி மேகலை. இவர் சமீபத்தில் காளி எனும் ஆவண படத்தின் முதல் தோற்ற காட்சியை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்தார். காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் உள்ள இந்த போஸ்டர் இணையத் தில் வைரலானது. இந்த போஸ்டரை வெளி யிட்ட லீனா மணிமேகலையை இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் இயக்குநர் லீனா மணிமேக லைக்கு எதிராக புகார் அளித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் சரஸ்வதி, இயக்குநர் லீனா மணி மேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்து, அதன் வீடியோவை சமூக வலைத்தளங் களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக செல் வபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகா ரின்பேரில், சரஸ்வதி மீது தகாத வார்த்தை களால் பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தடாகத்தில் ஒற்றை யானை நடமாட்டம்
கோவை, ஜூலை 6- கோவையை அடுத்த தடாகத்தில் ஒற்றை யானை நடமாட்டம் காணப்படுவ தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், தடா கம் சாலை, திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. மலையின் கீழ் பகுதியில் யானை உலா வருவதால், யானை எப்பொழுது வேண் டுமானாலும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், வனத்துறையினர் யானையை ஊருக்குள் வராத வண்ணம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வனத்துறை யினர் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணியை தீவி ரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூரில் மின்சாரம் தாக்கி இரண்டு மயில்கள் உயிரிழப்பு
திருப்பூர், ஜூலை 6 - திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்பு பகுதிக ளுக்கு இரை தேடி மயில்கள் வருவது வழக்கம். இதனிடையே திருப்பூர் டிடிபி மில் சாலையில் மயில் ஒன்று பறந்து வந்த போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த மின் மாற் றியில் சிக்கி உயிர் இழந்தது. இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச் சென்றனர். அதேபோல் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளை யம் பகுதியில் மின் கம்பத்தில் சிக்கி மயில் ஒன்று உயிரி ழந்தது. பொதுமக்கள் தகவலின் பெயரில் வனத்துறை அதிகா ரிகள் உயிரிழந்த மயிலை எடுத்து சென்றனர்.
தொடர் வழிப்பறி: 3 பேர் கைது
கோவை, ஜூலை 6- மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடு பட்டு வந்த 3 பேரை போலிசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறு முகை பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் செவ்வாயன்று இரவு சிறுமுகை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென அவரை கார் ஒன்று வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய 3 பேர் திருமலைச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிட மிருந்த பணம் ரூ.2 ஆயிரத்தை பறித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்த திருமலைச்செல்வன் சத்தம் போட்டார். இவரின் சத் தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் வழிப்பறி யில் ஈடுபட்டவர்கள் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து திரு மலைச்செல்வன் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலிசார் விசாரனை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான காரில் வந்த வர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அதில், அவர் ்கள் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த கார்த்தி (24), வீராசாமி (24) மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்த குமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் சிறு முகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகு தியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ரத்த நாளங்கள் சுருண்டிருந்த பெண்ணுக்கு சிகிச்சை கர்ப்ப பையை அகற்றாமல் கோவை அரசு மருத்துவமனை சாதனை
கோவை, ஜூலை 6- குழந்தையை பிரசவித்த பெண்ணின் ரத்த நாளங்கள் சுருண்டிருந்த நிலையில் கர்ப்ப பையை அகற்றாமல் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்தவர்கள் நுண் கதிர் இயக்கத்தின் மூலம் பெண்ணிற்று சிகிச்சை அளித்து சாதித்தனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் நிர்மலா கூறுகையில், கோவை கரும்புக் கடையை சேர்ந்த உம்மு சல்மா என்கிற பெண் பிரசவத்திற் காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஜூன் 8 ஆம்தேதி அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவ மாகி வீட்டிற்க்கு சென்றார். பிரசவமாகி 10ஆவது நாள் அதிக உதிரபோக்குடன் மீண்டும் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு 5 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கர்பப்பையில் ரத்த நாளங்கள் சுருண்டு உள்ளது (AV Malformation) என தெரியவந்தது. இதுபோன்ற பாதிப்பு அடைந்தவர்களுக்கு உயிர்களை பாதுகாப்பதற்கு கர்பப்பையை எடுப்பதே தீர்வாகும். இந் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் Biplane CT Angiogram மூலம் மருத்துவ கல்லூரி முதல்வர் நிர்மலா தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைய டுத்து நுண்கதிர் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு மருத்து வர்கள் இணைந்த Uterine Artery Embolisation மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, கர்பப்பை அகற்றாமல், நவீன சிகிச்சை மூலம் கர்பப்பையும், உயிரும் காப்பாற்றப்பட்டது. அரசு மருத்துவமனையின் மருத்துவர்களின் இந்த முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இச்சிகிச் சையை வெற்றிகரமாக அளித்திட்ட மருத்துவர்களுக்கு சக மருத்துவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாதிக்கப் பட்ட பெண்ணின் உறவிர்கள் நன்றியை தெரிவித்தனர்.
காலமானர்
கோவை, ஜூலை. 6 – மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம், வாடிப்பட்டி தாலுகாவின் முன்னாள் செயலாளராக வும், பின்னர் கோவைக்கு இடம்பெயர்ந்த பிறகு கோவை கிழக்கு நகரக்குழு விற்குட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம் பகுதி கிளை செய லாளராகவும் இறுதிவரை செயல்பட்டவர் தோழர் ராசு. இவர் உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், சிகிச்சை பல னளிக்காமல் புதனன்று கால மானார். இவரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற் றும் ஊழியர்கள் திரளா னோர் இறுதி நிகழ்வில் பங் கேற்று அஞ்சலி செலுத்தி னர்.