பொள்ளாச்சி, ஜன.18- பொள்ளாச்சி நகர பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, தற்போது துப்புரவுப் பொருட்க ளும், குப்பைகளும் வைக்கும் கிடங் காக மாறியுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி மத்திய பழைய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட் டும் அறை திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்நிலை யில் அம்மா தாய்மார்கள் பாலூட் டும் அறை ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து நடை முறையில் இருந்து வருகிறது. பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்திலுள்ள அம்மா தாய் மார்கள் பாலூட்டும் அறையில் தற் போது துப்புரவு பணிக்கு தேவை யான பொருட்கள் மற்றும் குப்பை கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான தாய்மார்கள் பாலூட்டும் அறையை பயன்படுத்த முடிவதில்லை. தமிழக அரசின் இத்திட்டமும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். எனவே, உடனடியாக பொள் ளாச்சி நகராட்சி தாமாக முன்வந்து இந்த அறையை சுத்தப்படுத்தி தாய் மார்கள் பாலூட்டும் அறையாக மாற்ற வேண்டும். இத்திட்டம் பெண் களின் நலன் சார்ந்துள்ளதால் தமி ழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென பொள்ளாச்சி நகர பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.