மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆயுள் தண்டனை
உதகை, செப்.14- மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடி அடுத்த மாயாறு பகுதியை சேர்ந்தவர் மணி (52). வனத்துறையில் தற்காலிக அடிப் படையில் சமையல்காரராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடைய மகளை மசினகுடி பகுதியில் உள்ள ஒரு ஊரில் திருமணம் முடித்துக் கொடுத்து உள்ளார். அந்த ஊருக்கு மகளை பார்க்க சென்று வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருடன் மணிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த விவசாயிக்கு, 15 வயது சிறுமி உள்பட 3 மகள்கள் உள்ளனர். 2021ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிப்பால் சிறுமிக்கு கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டது. இதனால் 85 சதவிகிதம் உடல் பாதிக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளியான அந்த சிறுமி யால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. சிறுமியின் தாயாரும் ஏற்கனவே இறந்து விட்டதால் அவருடைய தந்தை மற்றும் இரண்டு சகோதரிகள், அவரை கவனித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று சிறுமியின் தந்தை வேலைக்கு சென்று விட்டார். மற்ற சகோதரிகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் அப்போது வீட்டிற்கு வந்த மணி, சிறுமி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதற்கிடையே பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மற்ற 2 சிறுமிகள் கதவை திறக்க முடியாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சிறுமிக்கு, மணி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுசீலா, ஏட்டு சுகந்தி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து ஒரு வருடத்திற்கு பின்னர் பிணையில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு கூறப் பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட மணிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதைத் தொடர்ந்து குற்றவாளி மணி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அரசு சார்பில் இரண்டு மாத காலத்திற்குள் ரூ.10 லட்சம் சிறுமிக்கு நிவாரணம் வழங்க நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டு உள்ளார்.
சனாதன கோட்பாடுகளைத்தான் திமுக அரசு எதிர்க்கிறது
சேலம், செப்.14- இந்து மதத்தை திமுக எதிர்க்கவில்லை, மனிதரில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற பேதம் இருக்கும் என்கிற சனாதனத்தைத் தான் திமுக அரசு எதிர்க்கிறது என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்து சமய அறநிலை துறை சார்பில் 5213 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. 1144 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் உள்ள கோவில்களுக்கு தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளது. 2023 -24 ஆண்டு களில் மேலும் பல கோயில்களை குட முழுக்கு நடத்த திமுக அரசு நூறு கோடி ஒதுக்கி உள்ளது. அனைத்து கோயில் களையும் பொக்கிஷமாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட் டுள்ளது. தெய்வங்களையும் இறை அன்பர் களையும் மகிழ்ச்சியாக வைக்கும் ஆட்சி யாக திமுக அரசு உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டிருக்கிறார். அவரின் நடைபயணம் முழுக்க தோல்வி அடைந்துள்ளது. பாஜக அண்ணாமலை எங்களின் பணியை திசை திருப்ப முயற்சிக்கிறார். ஆனால், அது எடுபடாது. 94 அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் மூன்று பேர் பெண்கள் என்பதை பெரு மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதைத்தான் நாங்கள் சமத்துவ ஆட்சி என் கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகரா கலாம் என்ற திட்டத்தின் கீழ் 38 பேர் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் தான் எட்டு பேர் பெண் ஓதுவார்கள் பணி நிய மனம் செய்யப்பட்டுள்ளது. சனாதானத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரையும் நாங்கள் வெறுக்கவில்லை, குலக்கல்வி, உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சில கோட்பாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை தமிழக முதல்வர் எந்த இடத்திலும் குற்றம் சொல்லவில்லை, இறை நம்பிக்கையை எதிர்த்து எங்கும் பேச வில்லை. சமத்துவத்தின் ஓர் அங்கம் தான் திமுக என்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்கள்
திருப்பூர், செப். 14 - தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்படு வதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அரசால் மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் 100 மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளில் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கான அடையாள அட்டை, யுடிஐடிக்கு பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத் தப்பட்டு வரும் அரசின் நலத் திட்டங்கள் குறித்து ஆலோ சனைகள் வழங்குவதற்கு இரண்டாவது சிறப்பு முகாம் 16ஆம் தேதி சனியன்று தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சான்றுகள் வழங்க உள்ள னர். இம்முகாமிற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றுகளுடனும், மருத்துவச் சிகிச்சை பெற்றிருந்தால் அதற்கான ஆவணங்கள் மற்றும் மார்பளவு புகைப்படம் - 5 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என\ மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.
கருவலூரில் இன்று மின்தடை
திருப்பூர், செப்.14- கருவலூர் துணை மின்நிலையத்தில் வெள்ளியன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைப்ப டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண் டம் பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம் பாளையம், உப்பிலிபாளை யம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண் டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளை யம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.
திருப்பூரில் நாளை மின் தடை
திருப்பூர், செப். 14 – திருப்பூர் மாநகரில் சந்தைப்பேட்டை, பழவஞ்சிபாளை யம், குமரன் சாலை மற்றும் குமார் நகர் துணை மின் நிலை யங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சு.ராமச் சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் பெரு வாரிய இடங்களில் மின் விநியோகம் தடைப்படும். குறிப்பாக சந்தைப்பேட்டை, அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, செரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளை யம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம். ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திருவிக நகர், கவுண்டம் பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம் பாளையம், ஏபிடி சாலை, கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்க லம் சாலை, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், புதூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அன்று மின் விநியோகம் இருக்காது. அதேபோல் திருப்பூரின் வடக்குப் பகுதியில் ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமா ரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், ரங்கநாதபுரம், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், டிஎஸ்ஆர் லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, 60 அடி ரோடு, குத்தூஸ்புரம், என்ஆர்கே புரம், வெங்க டேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதி புரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பேருந்து நிலையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடைபடும்.
கீழ்பவானி பாசனக் கால்வாய்களில் எதிர்ப்புகளை மீறி விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க வலியுறுத்தல்'
திருப்பூர், செப். 14 – கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி மாநில நீர்வளத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்க ளுக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: செப்.18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. வழிபாட்டின் போது பாசனப் பகுதிகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, வழிபாட்டுக்குப் பிறகு நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஒரு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பா லான சிலைகள் வேதிப்பொருட்களைக் கொண்டே செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்புகளை மீறி கீழ்பவானி பாசனக் கால்வாய்களில் ஆங்காங்கே சிலை களைப் போட்டுவிட்டுச் சென்று விடுகின்ற னர். சிலைகளில் சேர்க்கப்படும் ரசாயனம் நீரை மாசுபடுத்தி விடுகிறது. உடைக்கப்பட்ட சிலைகளின் பாகங்கள் நீரில் உருண்டோடிப் போய் மதகுகளை அடைத்து விடுகிறது. இத னால் நீர் வழங்குவதில் தடை ஏற்படுகிறது. எனவே எதிர்ப்புகளை மீறி இந்தச் சிலை களைப் பாசனக் கால்வாய்களில் கரைப்பதை அரசு தடை செய்ய வேண்டும். மீறி கரைப் போர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தின் சார்பில் செ.நல்லசாமி வலியுறுத்தி உள் ளார்.
பெதப்பம்பட்டி நால் ரோடு பேக்கரியில் தீ விபத்து
திருப்பூர், செப்.14- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பேக்கரியில் வியாழனன்று அதிகாலை எதிர் பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட் டது. அப்பகுதி மக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் பேக்கரியில் இருந்த சிலிண்டரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற் றினர். இந்த விபத்தில் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமா கின. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீய ணைப்புதுறை தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது, இது குறித்து குடிமங்கலம் போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
அதிகரிக்கும் குற்றங்கள்: போலீசார் எச்சரிக்கை
திருப்பூர், செப்.14- மூலனூர் காவல் நிலையம் சார்பில் புதன ன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது, மூலனூா் பகுதியில் விவசா யம் பிரதானத் தொழிலாக உள்ளது. மேலும் ஆடு, மாடுகளும் வளா்க்கப்படுகின்றன. விவ சாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் ஆடு, மாடுகளை கொட்டாய்களில் கட்டி விட்டு தொலைவிலுள்ள தங்களுடைய வீடு களுக்குச் சென்று விடுகின்றனர். அருகில் யாரும் இல்லாததால் ஆடுகள் அதிக அள வில் திருடப்படுகின்றன என்று புகார்கள் வரு கின்றன. இது தவிர வழிப்பறி மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங் களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாக னங்களில் தனியாகச் செல்லும் பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகள் தோட்டம், காடுகளில் உள்ள பொருள்களைப் பாது காக்க அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும். வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூா் செல்பவா்கள் அருகில் வசிப்பவா்களுக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்புனர் வுடன் இருந்து குற்றத் தடுப்பு நடவ டிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் : தமிழக - கேரள எல்லையில் சோதனை
திருப்பூர், செப்.14- கேரள மாநிலம் கோழிக் கோடு மாவட்டத்தில் உயிர் கொல்லி நோயான நிபா வைரசுக்கு இரண்டு பேர் பலி யானார்கள். இதையடுத்து சுகாதாரத் துறையினரால் தமிழக கேரளா எல்லை யில் நோய் தடுப்பு நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தமிழக கேரள எல்லை யான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்காணிப்பு பணியை தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஒன்பதாறு சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத் துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், செவிலியர் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருகின்ற வாகன ஓட்டிக ளுக்கு காய்ச்சல் பரிசோ தனை மற்றும் நிபா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப டுத்தி வருகின்றனர். காய்ச்சல் கண்டறியப்பட் டால் உடுமலை அரசு மருத்து வமனை மற்றும் அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு பரிந்துரைக்க ஏற் பாடு செய்யப்பட்டு உள் ளது.
எலக்ட்ரிக் பைக் வெடித்து தீ விபத்து
திருப்பூர், செப். 14 - திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் அருகில் எலக்ட்ரிக் பைக் விற்பனை ஷோரூம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் ஷோரூமில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய எலக்ட்ரிக் பைக்கில் வியா ழக்கிழமை மாலை திடீரென பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற் பட்டது. உடனடியாக ஷோரூம் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ மளமளவெனப் பரவியது. இதையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முற்றிலுமாக அணைத் தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும் புகையுடன் காட்சியளித்து. இந்த சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணா பிறந்தநாள்: 2ஆவது வார்டில் பகுதி சபா கூட்டம்
திருப்பூர், செப். 14 – தமிழக முன்னாள் முதல் வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளி யன்று திருப்பூர் இரண்டா வது மண்டலத்துக்கு உட் பட்ட இரண்டாவது வார்டு, பாண்டியன் நகர் கருப்பரா யன் கோயில் வளாகத்தில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் நடத்தப்படு வதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு
ஈரோடு, செப்.14- ஈரோட்டிலிருந்து சித்தோடு, கவுந்தப்பாடி, கோபிசெட்டி பாளையம் சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், சாம்ராஜ் நகர் வழியாக மைசூர் சாலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு முதல் பண்ணாரி வரை கவுந்தப்பாடி வழியாக 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கவுந்தபாடியை அடுத்த பாலபாளையம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைப்பதற்கான அறி விப்பு பலகை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுங்கச் சாவடி அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தி யில் எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகள், விவசாய கூலி தொழி லாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். இவ்வழியாக சென்று வர அடிக்கடி சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் விவ சாய விளை பொருட்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். எனவே, இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்கச்சாவடி அமைய வுள்ள பாலப்பாளையம் பகுதியில் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ரயில் சேவை ரத்து
கோவை, செப்.14- ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி ரயில் நிலை யங்களுக்கு இடையே உள்ள லெவல் கிராசிங்கிற்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதால், பொறியியல் பணிகளை எளிதாக்க செப்.23, 24, 25 ஆம் தேதிகளில் ரயில் கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள் ளது. அதன்படி, ரயில் எண்.16319 கொச்சுவேலி – எஸ்எம்விடி பெங்களூரு (கோயம்புத்தூர், சேலம் வழியாக) ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் 23ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படு கிறது. ரயில் எண்.16320 எஸ்எம்விடி பெங்களூரு - கொச்சு வேலி (சேலம், கோயம்புத்தூர் வழியாக) ஹம்சஃபர் எக்ஸ் பிரஸ் 24ஆம் தேதியன்று முழுமையாக ரத்து செய்யப்படு கிறது. ரயில் எண்.12683 எர்ணாகுளம் – எஸ்எம்விடி பெங்க ளூரு (போதனூர், சேலம் வழியாக) 24ஆம் தேதியன்று எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண்.12684 எஸ்எம்விடி பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ் பிரஸ் (சேலம், போதனூர் வழியாக) 25ஆம் தேதியன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாமக்கல் புதிய பேருந்து நிலைய பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும்: அதிகாரிகள்
நாமக்கல், செப்.14- நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டது. இந்த நகராட்சி பகுதியில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சியில் 27 பேருந்து நிறுத்தங்களை கொண்ட பேருந்து நிலையம் 3.77 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இது போதுமானதாக இல்லை என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு புதிய புறநகர் பேருந்து நிலை யம் அமைக்க முதலைப்பட்டி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 12.90 ஏக்கர் நிலம் நகராட்சி சார்பில் வாங்கப்பட்டது. இதன்பின் சுமார் ரூ.36 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரு கிறது. இப்பணி கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் 50 பேருந்து நிறுத்தங்கள், 57 கடைகள், 2 உணவகங்கள், 3 பய ணியர் காத்திருப்பு பகுதி, 2 ஏடிஎம் மையம், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் வைப்பறை மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த னர். இப்பணி தற்போது சுமார் 70 சதவிகிதம் முடிவடைந் துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் 3 மாத காலத்தில் முடிக் கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பி னும் சுற்றுவட்ட சாலையில் இருந்தே பேருந்து நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதால், சுற்று வட்டசாலை பணியை தொடங்கி, பேருந்து நிலையம் வரை முடித்தால் மட்டுமே புதிய பேருந்து நிலையத்தை பயன் பாட்டுக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பெருந்துறை: நாளை மின்தடை
ஈரோடு, செப்.14- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனி யன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வுள்ளன. இதனால் சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜ வீதி, மேக்கூர், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, கோவை மெயின்ரோடு சின்னமடத்துபாளையம், பெரிய மடத்துபாளையம், லட்சுமி நகர், கருக்கங்காட்டூர், கள்ளியம் புதூர், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சனியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ரேசன் கடை வளாகத்தில் பயிலும் மாணவர்கள்
தருமபுரி, செப்.14- தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பத்திர அள்ளி ஊராட்சி ஊத்துபள்ளத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப் பகுதியை சேர்ந்த 18 மாணவ, மாணவிகள் படித்து வருகின்ற னர். இங்கு 2 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சி தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள், ஆசி ரியர்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதன் காரணமாக வகுப் பறைகளை பூட்டி விட்டு அருகில் உள்ள ரேசன் கடை வளா கத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சித்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் குழந்தைகள் பூச்சி கடியால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து ஆசிரியர்களிடம் கூறினோம். அவர்கள் மாற்று ஏற்பாடு செய்வதாக கூறி அருகில் உள்ள ரேசன் கடை வளாகத்தில் குழந்தைகனை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். மழை, வெயில் காலங்களில் குழந்தை கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர் வாகம் பள்ளி வகுப்பறைக்குள் விஷ பூச்சித்தொல்லையை கட் டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
ரயிலில் தவறிய 8 வயது சிறுமி 21 வருடங்களுக்கு பிறகு மீட்பு
தருமபுரி, செப்.14- தருமபுரி ரயிலில் தவறிய வாய் பேச முடியாத 8 வயது சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயிலிருந்து மீட்டு பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்பட்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கெண்டயனஅள்ளி புதூரைச் சேர்ந்தவர்கள் வெங்கடா சலம் - மாதம்மாள் தம்பதி. இவர்களது மகள் ரம்யா. காதுகேளாமல் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், தருமபுரி அருகே உள்ள தனி யார் வாய் பேச முடியாத காதுகேளாத பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு பள்ளி சார்பில் குழந்தை களை ரயில் மூலம் கர்நாடக மாநிலம், மைசூருக்கு சுற்றுலா அழைத்து சென் றனர். அப்போது ரம்யா ரயிலில் காணா மல் போனார். இதையடுத்து ரம்யாவின் பெற்றோர் மகளை பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மகளை தேடும் முயற்சியை கைவிட்டனர். இந்நிலை யில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத ஒரு பெண் மராட் டிய மாநிலம், புனேவில் இருப்பதாக வெங்கடாசலத்தின் செல்போன் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்த இளம்பெண் ணின் புகைப்படம், பெயர் வந்தது. அவர் 21 ஆண்டுக்கு முன்பு ரயிலில் காணா மல் போன தனது மகள் ரம்யா என தெரியவந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்ட காதுகேளாதோர் நல சங்க நிர் வாகிகள் புனேவிற்கு சென்று ரம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத் தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மகளை கண்ட பெற்றோர் கட்டி தழுவி வர வேற்றனர். இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், சுற்றுலா சென்றபோது நான் ரயிலின் இருக்கைக்கு கீழே தூங்கிவிட்டேன். அதனால் என்னை அவர்கள் விட்டு சென்று விட்டனர். ரயி லில் மும்பை சென்ற என்னை மராட்டிய போலீசார் மீட்டு ஒரு காப்பகத்தில் ஒப்ப டைத்தனர். அங்கு என்னை போல காது கேளாத மற்றும் வாய் பேசாத பெண் எனக்கு அறிமுகமானார். அவரிடம் நடந்த விவரம் குறித்து கூறினேன். இதன் பின் அவர் மூலம் நான் எனது பெற் றோரிடம் சேர்ந்து விட்டேன். தன்னை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவ டிக்கை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என கண்ணீர் மல்க தெரிவித்தார்.