பென்னாகரம், ஏப்.10- பென்னாகரம் அருகே பள்ளி மாண வியை கடத்தி சென்று, பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வய துடைய மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்.4 ஆம் தேதியன்று முதல் வீட்டில் இருந்த தனது மகளை காணவில்லை என பெற்றோர் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (24) என்பவர், பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.