திருப்பூர், டிச.17- திருப்பூர் மாநகராட்சி பூலுவபட்டி நெருப்பெரிச்சல் சாலையில் அமைந் துள்ள தனியார் பள்ளியில் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய் தோர் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூரில் ஏ.பி.எஸ் அகாடமி பள் ளியில் துவக்கநிலை வகுப்பு படிக்கும் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த குழந்தையின் பெற்றோர் மூலம் புகார் தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாக கூறி அந்த குழந்தையின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து சிசிடிவி கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த னர்.
பாதிக்கப்பட்ட குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு கவ னம் செலுத்தாமல், வழக்கு பதிவு செய் யாமலும், விசாரணை என்ற பெயரில் குழந்தையின் பெற்றோரை காவல் துறையினர் பள்ளிக்கு வரவழைத்தது, பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இப்பள்ளி பூலுவபட்டி பகுதியில் அதிமுகவின் செயலாளராக இருக்கக் கூடிய முன்னாள் மாமன்ற உறுப்பின ருக்கு சொந்தமானது. அவர்களது செல்வாக்கை பயன்படுத்தி இப்பிரச் சனையை மூடிமறைக்க முயற்சிப்ப தாகவும், அதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பதாகவும் பொதுமக்கள் கூறினர். ஆகவே, குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.எஸ். அகாடமி பள்ளியின் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டம் நடத் தப்பட்டது. மேலும், இப்பிரச்சினையில் சம் பந்தபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ள னர்.