தாராபுரம், ஜூலை - 11 தாராபுரம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப் புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகி றது. நகராட்சி சார்பில் சாக்கடை கட்டும் போது ஆக்கிரமிப்பை அகற்றலாம் தற்போது அகற் றினால் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சாக்கடை ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. தாராபுரம் நகராட்சி பகுதியில் பொதுப்ப ணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஞாயிறு விடுமு றையை அடுத்து நிறுத்தப்பட்ட பணிகள் மீண் டும் பூக்கடை கார்னரில் இருந்து பொள்ளாச்சி சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதையடுத்து பொள்ளாச்சி சாலை சாக்கடை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றியபோது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்க னவே நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது புதிய சாக்கடை பணிகள் நடைபெறும். எனவே தற் போது உள்ள சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என தாராபுரம் வர்த்தக கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் வியாபா ரிகள் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியா ளர், போக்குவரத்து ஆய்வாளர் ஞானவேல், காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோ ரிடம் தெரிவித்தனர்.இந்நிலையில் வியாபாரி கள் பெருமளவில் திரண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.அதன்பின்னர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரி கள் மற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.