districts

பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

தருமபுரி, ஆக.19- தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தருமபுரி நகராட்சியில் 33  வார்டுகள் உள்ளது. இங்கு, 1 லட்சத்திற்கும் அதிகமானோர்  வசிக்கின்றனர். நகராட்சியில் உள்ள வீடுகள், கடை கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்தது.  இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு தருமபுரி நகராட்சி சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியது. முதல் கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்த மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சுத்தகரிக்கப்பட்ட கழிவு நீர் சனத்குமார் நதிக்கு சென்றன.  இந்நிலையில், நகராட்சி நிர் வாகத்தின் பராமரிப்பின்மை யால் முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, பிடமனேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை அடைப்பு  ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் அடைப்பை அவ்வப்போது சீர் செய்து வந்தன.  இந்நிலையில், தருமபுரி - கிருஷ்ணகிரி சாலை நான்கு ரோடு அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். மேலும் நகராட்சியின் பராமரிப்பின்மையால் இது போன்ற அவலங்கள் நடந்தேறி வருகிறது. மேலும்,பாதாள சாக்கடை கழிவுநீரால் நோய் ொற்று பரவுவதற்குள் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.