districts

img

மண் கழிவுகளால் கடும் அவதி நடவடிக்கை கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல், ஏப்.25- வெளியூர்களிலிருந்து எடுத்து வரப்பட்டு, கொட்டப் படும் மண் கழிவுகளால் அவதிக்குள்ளாவதால் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோக்கலை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக் கலையில் ஞாயிறன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், இரவு நேரங்களில் கல்குவாரிகளில் இருந்து  தண்ணீர் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கனிம வளங்களும் சூறையாடப்படுகிறது. எனவே,  இதனை தடுக்க கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சியில் தங்கி  பணிபுரிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வெளியூர் கிராமங்களிலிருந்து எம்.சான்ட், பி.சாண்ட் மண் கழிவுகளை எடுத்து வந்து கோக்கலை எளை யம்பாளையம் பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப் பட்டுள்ளது. இவை காற்று வீசும் போது, காற்றோடு காற்றாக கலந்து விவசாய தோட்டங்கள், குடியிருப்புகள் என பரவி அப்பகுதியிலேயே வசிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள் ளது. ஆகவே, வேறு கிராமங்களில் இருந்து மண் கொண்டு  வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.  முன்னதாக, இக்கூட்டத்தில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் லீலா வதி, ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.