தாராபுரம், டிச. 9- மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட் டப்பணி குழு ஆணையின்படி தாராபுரம் வட்ட சட்டப் பணி குழுவின் சார்பில் 39 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் சிறப்பு நீதிமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் மொத்தம் 39 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்மபிரபு தலை மையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதி பதி நாகராஜ், மாஜிஸ்டிரேட் பாபு, முன்சீப் மதிவதனி வனங்கா முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமரச தீர்வு மூலம் 2 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 30 உரிமையி யல் வழக்குகள், ஜிவனம்ச வழக்குகள் 2, குடும்ப வன்முறை வழக்கு 1, குடும்ப வழக்கு 2, செக் மோசடி வழக்குகள் 3, என மொத்தம் 39 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 39பய னாளிகள் பலன் பெற்றனர். தீர்வு காணப்பட்ட வழக்குக்கான சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு தலைவர் தர்மபிரபு பய னாளிகளுக்கு வழங்கினார். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.